Categories: இந்தியா

தவறுகளை சரி செய்து விண்ணில் பாய காத்திருக்கும் சந்திராயன்-3.! சந்திராயன்-2வில் என்ன நடந்தது.?

Published by
மணிகண்டன்

சந்திராயன்-3யானது சந்திராயன்-2வில் இருந்து எப்படி வேறுபடுகிறது என இஸ்ரோ தரப்பில் விளக்கம் வெளியாகியுள்ளது. 

கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 22இல் இஸ்ரோ விஞ்ஞானிகளால் சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்-2 விண்கலமானது ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றை கொண்டிருந்தது. விக்ரம் எனும் லேண்டர் சீரான தரையிறக்கத்தை செய்யத் தவறிய நிலையில், பணியின் மற்ற அம்சங்கள் வெற்றிகரமாக இருந்தன.

இஸ்ரோவானது, சந்திரயான்-2வின் விக்ரம் லேண்டரை தென் துருவத்திலிருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிலவின் மேற்பரப்பில் ஒரு மென்மையான சமவெளியில் தரையிறக்க இலக்கு வைத்து இருந்தது. ஆனால் குறிப்பிட்ட சற்று தொலைவுக்கு  முன்பு லேண்டருடனான தொடர்பை இழந்தது. மென்பொருள் கோளாறால் சந்திரயான்-2 திட்டம் அப்போது தோல்வியடைந்தது.

இஸ்ரோவின் கூற்றுப்படி, விக்ரம் லேண்டரின் இயல்பான செயல்திறன் 2.1 கிலோமீட்டர் உயரம் வரை பூமியில் உள்ள மிஷன் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு தொடர்பு இருந்தது. அதன் பிறகு பூமிக்கும் லேண்டருக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

கடந்த 2019 செப்டம்பர் 10இல் சந்திரயான்-2 ஆர்பிட்டர் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்ததாக இஸ்ரோ ஒரு புதுப்பிப்பை வெளியிட்டது. பிரக்யான் என்று அழைக்கப்படும் ரோவர், விக்ரம் லேண்டர் விபத்துக்குள்ளானபோது விக்ரமுடன் சேர்ந்து அழிக்கப்பட்டது. இருப்பினும், சந்திரயான்-2 ஆர்பிட்டர் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

சந்திரயான்-2க்கு அடுத்ததாக சந்திரயான்-3 பயணம் வரும் ஜூலை 14இல் விண்ணில் துவங்க உள்ளது.  இரண்டு பயணங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை தான். சந்திரயான்-2 ஒரு சுற்றுப்பாதையை உள்ளடக்கியது, ஆனால் சந்திரயான் -3 எந்த சுற்றுவட்ட பாதையையும் குறிப்பிட்டு செல்லாது.

சந்திரயான்-2 போலவே, சந்திரயான்-3யும் புவிசார் செயற்கைக்கோள் ஏவுகணை வாகனமான மார்க்-IIIஐ பயன்படுத்தி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. சந்திரயான்-2 தோல்வி என கூறினாலும், அதன் பணி நோக்கங்களில் 90 முதல் 95 சதவீதம் வரை நிறைவேற்றப்பட்டுள்ளது என இஸ்ரோ கூறியுள்ளது.

சந்திராயன் 3யானது, சந்திர சுற்றுப்பாதையில் இருந்து பூமியின் நிறமாலை மற்றும் துருவ அளவீடுகளை புரிந்து கொண்டு, அதனுடைய சுற்றுப்பாதையை தேர்ந்தெடுத்து பூமியை பகுப்பாய்வு செய்யும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

8 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

8 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

10 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

10 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

12 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

13 hours ago