Categories: இந்தியா

ஒடிசா ரயில் விபத்து : என் மகன் சாகவில்லை… பிணவறையில் மகனை மீட்டெடுத்த பாசமிகு தந்தை.!

Published by
மணிகண்டன்

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி பிணவறையில் இருந்த இளைஞர் சாகவில்லை என்பது 2நாளுக்கு பின்னர் கண்டறியப்பட்டது. 

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ரயில் நிலையத்தில் ஹெலராம் என்பவர் கடந்த வெள்ளியன்று தனது மகன் பிஸ்வஜித்தை கோரமண்டல் ரயிலில் வழியனுப்பியுள்ளார். சில மணி நேரத்தில் ரயில் விபத்துக்குள்ளான செய்தி வெளியாகியுள்ளது.

உடனடியாக தனது உறவினருடன் ஆம்புலன்ஸ் மூலம் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்திற்கு வந்த ஹெலராம், விபத்து நடந்த இடம், மருத்துவமனை எங்கும் தேடியும் அவருடைய மகன் கிடைக்கவில்லை. பின்னர் அங்குள்ள ஊழியர்கள் பிணவறை சென்று பார்க்க கூறியிருக்கிறார்கள்.

கனத்த இதயத்துடன் அங்கு சென்றுள்ளார். முதலில் ஹெலராமை உள்ளே அனுமதிக்கவில்லை. பின்னர் அங்கிருந்த ஊழியர்கள் ஒருவருக்கு உயிர் இருப்பதாக கூறினர். அது தனது மகன் தான் என நம்பிக்கையுடன் காத்திருந்த ஹெலராமுக்கு மகிழ்ச்சி செய்தி கிடைத்தது. உயிருடன் இருந்தது அவருடைய மகன் பிஸ்வஜித் தான்.

பின்னர் முதல் சிகிச்சை பாலசோர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டது. அதற்கு பிறகு மேல் சிகிச்சைக்காக மருத்துவர் அனுமதியுடன் மேற்கு வங்க மாநிலத்திற்கு பிஸ்வஜித் கொண்டு செல்லப்பட்டார். இன்னும் முழுதாக நினைவு திரும்பாத பிஸ்வஜித்திற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிணவறை வரை சென்று திரும்பிய தனது மகன் எப்படியும் பழைய நிலைக்கு வந்து விடுவார் என நம்பிக்கையுடன் பாசமிகு தந்தை ஹெலராம் முயற்சி செய்து வருகிறார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

9 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

9 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

10 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

11 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

12 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

12 hours ago