[Image source : ANI]
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி பிணவறையில் இருந்த இளைஞர் சாகவில்லை என்பது 2நாளுக்கு பின்னர் கண்டறியப்பட்டது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ரயில் நிலையத்தில் ஹெலராம் என்பவர் கடந்த வெள்ளியன்று தனது மகன் பிஸ்வஜித்தை கோரமண்டல் ரயிலில் வழியனுப்பியுள்ளார். சில மணி நேரத்தில் ரயில் விபத்துக்குள்ளான செய்தி வெளியாகியுள்ளது.
உடனடியாக தனது உறவினருடன் ஆம்புலன்ஸ் மூலம் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்திற்கு வந்த ஹெலராம், விபத்து நடந்த இடம், மருத்துவமனை எங்கும் தேடியும் அவருடைய மகன் கிடைக்கவில்லை. பின்னர் அங்குள்ள ஊழியர்கள் பிணவறை சென்று பார்க்க கூறியிருக்கிறார்கள்.
கனத்த இதயத்துடன் அங்கு சென்றுள்ளார். முதலில் ஹெலராமை உள்ளே அனுமதிக்கவில்லை. பின்னர் அங்கிருந்த ஊழியர்கள் ஒருவருக்கு உயிர் இருப்பதாக கூறினர். அது தனது மகன் தான் என நம்பிக்கையுடன் காத்திருந்த ஹெலராமுக்கு மகிழ்ச்சி செய்தி கிடைத்தது. உயிருடன் இருந்தது அவருடைய மகன் பிஸ்வஜித் தான்.
பின்னர் முதல் சிகிச்சை பாலசோர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டது. அதற்கு பிறகு மேல் சிகிச்சைக்காக மருத்துவர் அனுமதியுடன் மேற்கு வங்க மாநிலத்திற்கு பிஸ்வஜித் கொண்டு செல்லப்பட்டார். இன்னும் முழுதாக நினைவு திரும்பாத பிஸ்வஜித்திற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிணவறை வரை சென்று திரும்பிய தனது மகன் எப்படியும் பழைய நிலைக்கு வந்து விடுவார் என நம்பிக்கையுடன் பாசமிகு தந்தை ஹெலராம் முயற்சி செய்து வருகிறார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…