இதை ரத்து செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் சிரோமணி அகாலி தளம் தலைவர்கள் இன்று உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
சீக்கியர்களுக்கு தனிநாடு வேண்டும் என்று கோரி காலிஸ்தான் என்ற அமைப்பு 1995-ல் பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பியாந்த்சிங்கை தற்கொலைப் படை தாக்குதல் மூலம் கொடூரமாக படுகொலை செய்தது. இதற்காக தீவிரவாதி ரஜோனாவுக்கு கடந்த 2007ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் இவருக்கு தூக்கு தண்டனை விதித்தது. எனவே, ரஜோனாவை கடந்த 2012-ல் இவரை தூக்கிலிட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் சீக்கியர் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று ரஜோனா தூக்கிலிடப்படவில்லை
இந்நிலையில் சீக்கிய குரு குருநானக்சிங்கின் 550வது பிறந்த நாள் ஆண்டை முன்னிட்டு ரஜோனாவின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால்இதுகுறித்து, நாடாளுமன்றத்தில் ரஜோனாவின் தூக்கு தண்டனையை ரத்து செய்யப் போவதில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சிறையில் அண்மையில் தீவிரவாதி ரஜோனா, தமது தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். பின்னர், குருத்வார பிரபந்த கமிட்டி நிர்வாகிகள் வேண்டுகோளை ஏற்று தீவிரவாதி ரஜோனா தமது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார். இந்நிலையில் இன்று பஞ்சாபை சேர்ந்த சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தலைமையிலான குழுவினர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது ரஜோனாவின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தினர்..
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…