[Image Source : The Indian Express/Representational]
கர்நாடக மாநில சட்டப்பேரவையில் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 8.26% வாக்குகள் பதிவு.
கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில், முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் தங்களது வாக்குகளை செலுத்தினர். பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடக மாநில சட்டப்பேரவையில் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 8.26% வாக்குகள் பதிவாகியுள்ளது. காலை 7 மணி முதல் நடைபெற்று வரும் வாக்குபதிவில் காலை 9 மணி நிலவரப்படி 8.26% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுபோன்று, ஒடிசா, உத்தரபிரதேச மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், ஒடிசாவின் ஜார்சுகுடா இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 9.75% வாக்குகள் பதிவாகியுள்ளன. உத்தரப் பிரதேசத்தின் சுவாரில் 7.93% வாக்குகளும், சான்பேயில் 10.14% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…