நான் யார் முதுகிலும் குத்த மாட்டேன்.. மாற்று கட்சிக்கு செல்ல மாட்டேன்.! டி.கே.சிவகுமார் உறுதி.!

Published by
மணிகண்டன்

நான் யார் முதுகிலும் குத்த மாட்டேன் மாற்று கட்சிக்கு செல்ல மாட்டேன் என கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் பேசியுள்ளார். 

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று 2 நாட்கள் கடந்த பின்னும் இன்னும் முதல்வர் யார் என்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் ஆலோசனை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இதில் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் யாருடைய முதுகிலும் குத்த மாட்டேன். யாரையும் மிரட்டி ஆதாயம் தேட மாட்டேன். அந்த மாதிரியாக நான் நடந்து கொண்டது இல்லை. நான் ஏன் வேறு கட்சிக்கு செல்ல வேண்டும்.? எல்லோரும் ஒருநாள் இறக்க தான் போகிறோம். நான் ஏன் மோசமான பெயருடன் சாக வேண்டும் என வெளிப்படையாக தனது நிலை குறித்து பேசியுள்ளார் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

7 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

8 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

9 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

9 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

10 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

10 hours ago