Goa Chief Minister Pramod Sawant! [Image Source : Twitter/@BJP]
கர்நாடக தேர்தல் நாளில் கோவாவில் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்தார் அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாளை கோவாவில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மே 10-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.
பாஜக, காங்கிரஸ், மஜத முக்கிய கட்சிகளாகப் போட்டியிடும் இத்தேர்தலில், பகுஜன் சமாஜ், சிபிஐ, சிபிஎம், இந்திய குடியரசுக் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இந்த நிலையில், கர்நாடக தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், கோவாவில் உள்ள பாஜக அரசு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்துள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் தேர்தல் நடக்கும் நிலையில், கோவாவுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் முதல்வர் பிரமோத் சாவந்த். இது தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்களையும் உள்ளடக்கும், கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தலுக்கு வாக்களிப்பதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. கோவாவில் முதலமைச்சர் விடுமுறை அறிவித்ததற்கு, எதிர்க்கட்சிகள் மற்றும் அம்மாநில தொழிற்கூட்டமைப்பு தலைவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, கௌரவப் பலகையில் இடம்பெற்றதை பெருமையாகக்…
குஜராத் : மாநிலம் வதோதரா மாவட்டத்தில், மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த 40 ஆண்டுகள் பழமையான கம்பீரா-முஜ்பூர் பாலம் 2025…
கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…