CAUVERY-ISSUE
தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை தீவிரமடைந்துள்ளது. இரு மாநிலங்களிலும் விவசாய அமைப்புகள் , மற்ற மாநில அமைப்புகள் போராடி வருகின்றன. போதிய தண்ணீர் வழங்க வேண்டும் என தமிழக அமைப்புகளும், தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்று கன்னட அமைப்புகளும் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர்.
முன்னதாக காவிரி ஒழுங்காற்று மையம் தமிழகத்திற்க்கு வினாடிக்கு 5000 கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை அடுத்து உச்சநீதிமன்றத்தில் நடந்த காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் காவிரி ஒழுங்கற்று பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதனை தொடர்ந்து தான் சமீபத்தில் டெல்லியில் காவேரி மேலாண்மை வாரியம் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் கலந்துகொண்ட அதிகாரிகள், தமிழகத்திற்கு வினாடிக்கு 12500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால், கர்நாடக அதிகாரிகள் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கூறியதால் இரு மாநில அதிகாரிகள் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டன.
இறுதியில், இந்த ஆலோசனை கூட்டத்தில் காவிரியில் இருந்து, தமிழகத்திற்கு வினாடிக்கு 3000 கனஅடி தண்ணீரை வரும் அக்டோபர் 15 வரையில் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது. காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க இயலாது, அது தான் எங்கள் நிலைப்பாடு, இதுதொடர்பாக சட்ட போராட்டம் நடத்துவோம் என முதலமைச்சர் சித்தராமையா கூறியிருந்தார்.
இந்த நிலையில், தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 3,000 கன அடி தண்ணீர் திறக்ககோரிய உத்தரவை மறு சீராய்வு செய்ய வேண்டும் என்று காவிரி ஆணையத்தில் கர்நாடக அரசு முறையீடு செய்துள்ளது. தற்போதைய சூழலில் தண்ணீர் திறக்க முடியாத சூழலில் இருக்கிறோம் என கர்நாடக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. கர்நாடகாவின் கருத்தை கருத்தில் கொள்ளாமல் தண்ணீர் திறக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…