Categories: இந்தியா

காவிரி ஆணையத்தில் கர்நாடக அரசு முறையீடு!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை தீவிரமடைந்துள்ளது. இரு மாநிலங்களிலும் விவசாய அமைப்புகள் , மற்ற மாநில அமைப்புகள் போராடி வருகின்றன. போதிய தண்ணீர் வழங்க வேண்டும் என தமிழக அமைப்புகளும், தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்று கன்னட அமைப்புகளும் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர்.

முன்னதாக காவிரி ஒழுங்காற்று மையம் தமிழகத்திற்க்கு வினாடிக்கு 5000 கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை அடுத்து உச்சநீதிமன்றத்தில் நடந்த காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் காவிரி ஒழுங்கற்று பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இதனை தொடர்ந்து தான் சமீபத்தில் டெல்லியில் காவேரி மேலாண்மை வாரியம் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் கலந்துகொண்ட அதிகாரிகள், தமிழகத்திற்கு வினாடிக்கு 12500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால், கர்நாடக அதிகாரிகள் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கூறியதால் இரு மாநில அதிகாரிகள் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டன.

இறுதியில், இந்த ஆலோசனை கூட்டத்தில் காவிரியில் இருந்து, தமிழகத்திற்கு வினாடிக்கு 3000 கனஅடி தண்ணீரை வரும்  அக்டோபர் 15 வரையில் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது. காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க இயலாது, அது தான் எங்கள் நிலைப்பாடு, இதுதொடர்பாக சட்ட போராட்டம் நடத்துவோம் என முதலமைச்சர் சித்தராமையா கூறியிருந்தார்.

இந்த நிலையில், தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 3,000 கன அடி தண்ணீர் திறக்ககோரிய உத்தரவை மறு சீராய்வு செய்ய வேண்டும் என்று காவிரி ஆணையத்தில் கர்நாடக அரசு முறையீடு செய்துள்ளது. தற்போதைய சூழலில் தண்ணீர் திறக்க முடியாத சூழலில் இருக்கிறோம் என கர்நாடக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. கர்நாடகாவின் கருத்தை கருத்தில் கொள்ளாமல் தண்ணீர் திறக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

5 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

6 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

6 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

7 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

7 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

9 hours ago