Categories: இந்தியா

கேரளா பெண் மருத்துவர் கொலை..! மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்..!

Published by
செந்தில்குமார்

கேரளாவில் பெண் மருத்துவர் ஒருவர் நோயாளி ஒருவரால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தை உலுக்கியுள்ளது.

கேரளாவில் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரா பகுதியில் உள்ள மருத்துவமனையில் நேற்று 23 வயதான பெண் மருத்துவர் ஒருவர், கைதி ஒருவரால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட பள்ளி ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. கொட்டாரக்கரா பகுதியில் உள்ள மருத்துவமனையில் வந்தனா தாஸ் என்ற பெண் மருத்துவர் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்துள்ளார்.

முன்னதாக, குடிபோதையில் வழக்கத்திற்கு மாறான முறையில் பேசி தன்னை சிலர் தன்னைத் தாக்குவதாகக் கூறி பள்ளி ஆசிரியர் சந்தீப், போலீசாரைத் தொடர்பு கொண்டுள்ளார். இதனையடுத்து, பூயப்பள்ளியில் ஒரு வீட்டின் அருகே அவரை போலீசார் கண்டுபிடித்தனர். அப்பொழுது அவர் குடி போதையில் இருந்துள்ளார். அவரது, ஒரு காலில் காயமும் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், சந்தீப் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். பரிசோதனையின் போது சாதாரணமாக நடந்து கொண்ட அவர், திடீரென அருகில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து அனைவரையும் தாக்க ஆரம்பித்துள்ளார். இதனால் ஒரு காவலர் காயமடைந்தார். இதனையடுத்து, அனைவரும் பரிசோதனை அறையை விட்டு வெளியேறிய நிலையில் வந்தனாவால் வெளிவர முடியவில்லை. பின்னர் சந்தீப் மருத்துவருக்கு எதிராக திரும்பி அவரை பலமுறை குத்தியுள்ளார்.

இதனால் பலத்தக் காயமடைந்த அவர், திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்த உடனேயே வந்தனாவுக்கு நீதி கோரி அரசு மருத்துவர்கள் அனைவரும் தங்களது பணியை புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த கொலையை கண்டித்து கேரளா முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்பொழுது அவசர சேவைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. மேலும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவசர சட்டம் நிறைவேற்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கேரள முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

16 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

17 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago