கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது. துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வெள்ளிக்கிழமை இரவு 7.40 மணியளவில் கேரள விமான நிலையத்தில் ஓடுபாதையில் சறுக்கிகொண்டு 35 அடி பள்ளத்தில் விழுந்தது.
இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் விபத்தில் முக்கிய தடயங்களை சேகரிக்கும் விமானத்தில் இருந்து கருப்பு விமான பெட்டி என்று அழைக்கப்படும் டிஜிட்டல் விமான தரவு ரெக்கார்டரை நேற்று புலனாய்வாளர்கள் மீட்டனர்.
இதையடுத்து, ஆய்விற்காக கருப்பு பெட்டி டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக விமான ஒழுங்குமுறை டி.ஜி.சி.ஏ அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனமான பி.டி.ஐ யிடம் தெரிவித்தார். கருப்பு பெட்டி ஒரு விமானத்தின் நடக்கும் அனைத்து உரையாடல் பதிவையும், உயரம் மற்றும் எரிபொருள் ஓட்டம் போன்ற பதிவுகளையும் பதிவுசெய்தது விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய உதவும் இது உதவுகிறது.
இந்த கறுப்புப் பெட்டி 2000 பாரன்ஹீட் வெப்பத்தில் தாங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 2 டன் எடையுடைய பொருள் விழுந்தாலும், சுமார் 30,000 அடி உயரத்திலிருந்து விழுந்தாலும் கறுப்புப் பெட்டிக்கு ஒன்னும் ஆகாது.எந்த விதமான கோர விபத்து நடந்தாலும், விமானம் முழுமையாக வெடித்து சிதறினாலும் இந்த கருப்பு பெட்டிக்கு மட்டும் எதுவும் ஆகாது, அவ்வளவு பாதுகாப்பு முறையில் இந்த கருப்பு பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…