துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று இரவு தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 விமானிகள் , ஒரு குழந்தை உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்து நடத்த அருகில் உள்ள கொண்டட்டி கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி, நேற்று விபத்து நடந்தபோது அந்த கிராமத்தை சார்ந்தவர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த மீட்பு பணியில், போலீசார், தீயணைப்பு வீரர்கள், தேசிய மீட்பு படை ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்கள் தனிமைபடுத்தி கொள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், விமானத்தில் பயணம் செய்த பிற பயணிகள் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கட்டாயம் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர்கள், கொரோனா பரிசோதனையும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா : அமெரிக்காவின் B-2 போர் குண்டுவீச்சு விமானங்கள் 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்ற திட்டத்தின் கீழ், ஈரானின் மூன்று…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஃபால்கன்-9 ராக்கெட் பல தடைகளை…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…