மணிப்பூர் வன்முறை.. பாஜகவுக்கான ஆதரவை திரும்ப பெறுகிறோம்.! குக்கி மக்கள் கூட்டணி அறிவிப்பு.!

Published by
மணிகண்டன்

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம், அம்மாநில உயர்நீதிமன்றமானது, மைத்தேயி இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனை எதிர்த்து பழங்குடியினர் குக்கி இனத்தை சேர்த்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தொடங்கிய இரு பிரிவினர்கள் வன்முறையானது மணிப்பூர் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகின.

அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. முதல்வராக பைரன் சிங் பொறுப்பில் இருக்கிறார். 60 சட்டமன்ற தொகுதிகள் இருக்கும் மணிப்பூரில் 32 தொகுதிகளை பாஜக கொண்டுள்ளது. மேலும், ஐந்து NPF எம்எல்ஏக்கள் ஆதரவும், மூன்று சுயேச்சை  எம்எல்ஏக்கள் ஆதரவும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியான NDA கூட்டணிக்கு வழங்கி வருகின்றன.

அதே போல, 2 குக்கி மக்கள் கூட்டணி சார்பாக 2 எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தன. தற்போது அந்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக குக்கி மக்கள் கூட்டணி தலைவர் டொங்மங் ஹாகிப் ( Tongmang Haokip) ஆளுநர் அனுசுயா உய்கேவுக்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.

மே மாதம் துவங்கிய மணிப்பூர் கலவரத்தில் இதுவரை 160கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்தில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. மணிப்பூரில் உள்ள தற்போதைய பைரன் சிங் தலைமையிலான பாஜக அரசாங்கத்திற்கான தொடர்ச்சியான ஆதரவு அளிப்பது பயனற்றதாக உள்ளது. இதனால் குக்கி இன மக்கள் கூட்டணி சார்பாக நாங்கள் பாஜக தலைமையிலான NDA கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுகிறோம் என அறிவித்துள்ளார்.

அதன்படி, குக்கி மக்கள் கூட்டணியில் உள்ள சைகுல் தொகுதி எம்எல்ஏ கிம்னியோ ஹாக்கிப் ஹாங்ஷிங் மற்றும் சிங்காட் எம்எல்ஏ சின்லுந்தாங் ஆகியோர் பாஜகவுக்கு தா0ங்கள் வழங்கிய ஆதரவை திரும்ப பெற்றுள்ளனர்.

எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களாக NPP யின் 7 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சி சார்பில் 5 எம்எல்ஏக்களும், JD(U) கட்சி சார்பில் 6 எம்எல்ஏக்களும் உள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

11 minutes ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

29 minutes ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

1 hour ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

2 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

2 hours ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

3 hours ago