மகனின் உடலை தானம் செய்வோம்- உக்ரைனில் கொல்லப்பட்ட நவீன் தந்தை..!

Published by
murugan

உக்ரைனின் கார்கிவ் நகரில் கொல்லப்பட்ட இந்திய மாணவர் நவீன் பெற்றோர்கள் தங்கள் மகனின் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து  தகவல் அளித்த நவீனின் தந்தை சங்கரப்பா, எனது மகன் மருத்துவத் துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால் அது நடக்கவில்லை. நவீனின் உடலை மற்ற மருத்துவ மாணவர்களாவது படிப்புக்கு பயன்படுத்தலாம். இதனால் நவீன்  உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறினார்.

நவீன் உடல் நாளை வருகிறது:

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ரஷ்யா-உக்ரைன் துப்பாக்கிச் சண்டையின் போது உயிரிழந்த நவீனின் உடல் திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு உக்ரைனில் இருந்து  பெங்களூரு விமான நிலையத்தை வந்தடையும் என்று முன்பு கூறியிருந்தார். தற்போது நவீன் உடல்  நாளை வரும் என அரசு அறிவித்தது. நவீன் குடும்பத்திற்கு கர்நாடக முதல்வர் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

நவீன் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும்:

நாளை மறுநாள் காலை 9 மணிக்கு மகனின் உடல் கிராமத்திற்கு வந்து சேரும் என நவீனின் தந்தை தெரிவித்தார். பிறகு சடங்குகள் முடித்த பின்னர் மருத்துவப் படிப்புக்காக தாவங்கேரி எஸ்எஸ் மருத்துவமனைக்கு உடலை தானம் செய்வதாக கூறினார்.  நவீன் உடல் பொதுமக்களின் பார்வைக்காக நாளைமறுநாள் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

8 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

9 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

9 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

11 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

11 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

11 hours ago