மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர்கள் எச்சரிக்கை; கங்கனா ரணாவத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு

Published by
Dinasuvadu desk

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியில் எல்லை பகுதிகளில் 78 நாட்களாக  பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் போராடு வருகின்றனர்.இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா ஏன் இதை பற்றி யாரும் பேசுவதில்லை என்று ட்வீட் செய்திருந்தார்.

சர்ச்சைக்குரிய ட்வீட் :

அத பின்னர் ரிஹானா ட்வீட் க்கு பதிலடி கொடுக்கும் விதமாக கங்கனா ரணாவத் சர்ச்சைக்குரிய ட்வீட் செய்திருந்தார்.அதில் டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, அவர்கள் இந்தியாவைப் பிளவுபடுத்த முயற்சிக்கும் பயங்கரவாதிகள். இதனால் பாதிக்கப்படக்கூடிய நமது தேசத்தை அமெரிக்காவைப் போல, சீனா எளிதாக பிளவுபட்ட நாட்டுக்குள் நுழைந்துவிடும்.முட்டாள் ! நாங்கள் உங்களைப் போல எங்கள் தேசத்தை விற்கவில்லை’’ என கங்கனா ரணாவத் தனது டுவிட்டர் பக்கத்தில் ரிஹானாவுக்கு பதிலடி கொடுத்திருந்தார்.

மன்னிப்பு கேட்க வேண்டும் :

இந்நிலையில் தனது ட்வீட் தொடர்பாக விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்காவிட்டால், ஒரு படத்திற்காக படப்பிடிப்புக்கு அனுமதிக்க மாட்டேன் என்று மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.இதனை அடுத்து, மத்திய பிரதேச போலீசார் பாலிவுட் நடிகர் கங்கனா ரனவுத்திற்கு வழங்கப்படும் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

கங்கனா ரணாவத் நடிக்கும் ‘தாகத்’ படத்தின் படப்பிடிப்பு பெத்துல் மாவட்டத்தின் சர்னி பகுதியில் நடைபெற்று வருகிறது.இது குறித்து பி.டி.ஐ-யுடன் பேசிய சர்னி நகர காவல்துறை கண்காணிப்பாளர் (சி.எஸ்.பி) அபய் ராம் சவுத்ரி,மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா பெத்துல் படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு போலீசாரிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறினார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

அகமதாபாத்தில் மழை: இறுதிப்போட்டி நடைபெறுமா? மழை குறுக்கிட்டால் கோப்பை யாருக்கு.?

அகமதாபாத்தில் மழை: இறுதிப்போட்டி நடைபெறுமா? மழை குறுக்கிட்டால் கோப்பை யாருக்கு.?

அகமதாபாத்: பெங்களூரு - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. போட்டியை காண, நரேந்திர…

28 minutes ago

“தமிழகத்தில் எந்த கன்னட திரைப்படமும் வெளியாகாது” – கொந்தளித்த தி.வேல்முருகன்.!

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

52 minutes ago

கடிதத்துக்கு பதிலாக கமல் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு? – தமிழிசை சௌந்தரராஜன்.!

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக்…

1 hour ago

மொழி விவகாரம்: உண்மையை ஏற்பதில் உங்களுக்கு ஏன் ஈகோ? கமலுக்காக குரல் கொடுத்த சீமான்.!

சென்னை : கன்னட மொழி பற்றி பேசியதால் கமல் நடித்த தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் நீடித்து…

3 hours ago

“கர்நாடகாவில் தக் லைஃப் வெளியீடு ஒத்திவைப்பு” – கமல் தரப்பு வழக்கறிஞர்.!

கர்நாடகா: நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து…

3 hours ago

இந்த வருஷம் ஆர்சிபிக்கு தான் கப்! ரூ.6.4 கோடி பெட் கட்டிய ராப் பாடகர் டிரேக்!

அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ராயல்…

5 hours ago