Categories: இந்தியா

மகாராஷ்டிரா தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம், நாங்கள் தயாராக இருக்கிறோம் – தாக்கர

Published by
பாலா கலியமூர்த்தி

சிவசேனா சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்கள் என ர் உத்தவ் தாக்கரே பேச்சு.

மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, மாநிலத்தில் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும், தனது கட்சி தயாராக இருப்பதாகவும் கூறினார். வழக்கு விசாரணையில் உள்ளது, எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என நம்புகிறோம் என்றார். தற்போதைய மகாராஷ்டிரா அரசு அடுத்த 15-20 நாட்களுக்குள் கவிழும் என்று சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் கூறியதை அடுத்து, இவ்வாறு கூறியுள்ளார்.

இதனிடையே, மகா விகாஸ் அகாடி அரசு சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் அதிருப்தியால் ஆட்சி கவிழ்ந்தது. தாக்கரே மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து சிவசேனா கட்சி இரண்டாக பிளவு பட்டது. இது, உத்தவ் தாக்கரே அணிக்கு பெரிய பின்னடைவாக இருந்தது.

இதன்பின், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு சிவசேனா பெயரையும், அதன் தேர்தல் சின்னமான “வில் அம்பையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதுதொடர்பாக உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கும் விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில், சிவசேனாவில் ஏற்பட்ட பிரிவுக்கு பிறகு முதல் முறையாக ஜல்காவ் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சிவசேனா சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்கள். எனவே, அவர்கள் அரசியல் ரீதியாக ஒழிக்கப்படுவதை நாம் பார்க்கத்தான் போகிறோம் என்றார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

42 minutes ago

“சங்கிகளின் மகிழ்ச்சிக்காக பேசுகிறார் இபிஎஸ்” – எடப்பாடி பழனிசாமிக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…

56 minutes ago

அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…

2 hours ago

லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சோகம்.!

விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…

2 hours ago

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா புழல் சிறையில் இருந்து விடுவிப்பு.!

சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…

3 hours ago

பிரதமர் மோடிக்கு உயரிய விருது அளித்து கவுரவித்த நமீபியா அரசு..!!

நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார்.…

3 hours ago