Categories: இந்தியா

முதல்வர் பொறுப்பை மல்லிகார்ஜுன கார்கேவே ஏற்க வேண்டும் – டி.கே.சிவக்குமார்

Published by
பாலா கலியமூர்த்தி

கர்நாடக முதல்வர் பதவியை மல்லிகார்ஜூன கார்கேவே ஏற்றுக் கொள்ள வேண்டும் என டி.கே.சிவகுமார் கோரிக்கை.

கர்நாடகாவில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி நிலையில், இதுவரை யார் முதலமைச்சர் என்பதில் இழுபறி நீடித்து வருகிறது. கர்நாடகாவில் சித்தராமையா, டிகே சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த சமயத்தில், யார் முதல்வர் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும் என காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் விவகாரம் தொடர்பாக சித்தராமையா, டிகே சிவகுமார் ஆகியோர் டெல்லி மல்லிகார்ஜுனா கார்கேவை சந்தித்து வந்தனர். இதன்பின், இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் ஆகியோருடன் இன்று அடுத்தடுத்து தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.

கர்நாடக முதல்வர் தேர்வில் காங்கிரஸ் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு கட்டுப்படுவேன் என போட்டியில் இருப்பவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்க உள்ளதாகவும், துணை முதல்வராக டிகே சிவகுமார் தவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், தனக்கு முதல்வர் பொறுப்பில்லை எனில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவே முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, துணை முதல்வர் பதவியோ, அமைச்சர் பதவியோ வேண்டாம் என டி.கே.சிவக்குமார் மறுப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது.

இதனிடையே காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், கர்நாடக முதல்வர் தேர்வு தொடர்பாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். இன்று மாலை அல்லது நாளைக்குள் முதல்வர் யார்? குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சித் தலைவர் கார்கே வெளியிடுவார். மாநிலத்தில் அடுத்த 3 நாட்களுக்குள் புதிய அமைச்சரவை உருவாக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

35 minutes ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

1 hour ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

17 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

17 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

19 hours ago