மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து, மம்தா பானர்ஜி தொடர்ந்து 3 வது முறையாக இன்று முதல்வர் பதவியேற்றுள்ளார்
மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் கடும் சவாலை எதிர்கொண்டு மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிரடி வெற்றி பெற்றது.இதனால்,மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வராக இன்று பதவி ஏற்றுள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக இந்த பதவியேற்பு விழாவானது மிக எளிய முறையில் கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்தில்கொண்டு இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க,மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேப் பட்டச்சார்ஜி,எதிர்க்கட்சி தலைவரான அப்துல் மன்னன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பீமன் போஸ்,திரிணாமுல் எம்.பி. அபிஷேக் பானர்ஜி,தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மற்றும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சவுரவ் கங்குலி ஆகிய குறைந்த பட்ச நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து,இன்று காலை 10.45 மணிக்கு ஆரம்பமாகிய இந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஜகதீப் தங்கர் முன்னிலையில்,மம்தா பானர்ஜி முதல்வராக பதவி ஏற்றார்.இதனால், தொடர்ந்து 3 வது முறையாக மேற்கு வங்க முதல்வராகப் பதவியேற்று மம்தா பானர்ஜி வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.
தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…
சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…