Categories: இந்தியா

விமானத்தில் குடிபோதை..பணிப்பெண்ணிடம் தகராறு..! அதிரடியாக கைது செய்த போலீசார்..!

Published by
செந்தில்குமார்

துபாய்-அமிர்தசரஸ் விமானத்தில் குடிபோதையில் விமானப் பணிப்பெண்ணிடம் தகராறு செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

துபாயிலிருந்து அமிர்தசரஸ் செல்லும் விமானத்தில் குடிபோதையில் பயணி ஒருவர் விமானப் பணிப்பெண்ணிடம் தகராறு செய்துள்ளார். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரின் கோட்லி கிராமத்தைச் சேர்ந்த ராஜிந்தர் சிங் என்ற நபர் விமானத்தில் குடிபோதையில் பயணம் செய்துள்ளார்.

இதனையடுத்து, ராஜிந்தர் சிங் விமானத்தில் உள்ள பணிப்பெண்ணுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் துன்புறுத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தை விமானப் பணிப்பெண் குழுவினரிடம் தெரிவித்த நிலையில், விமான ஊழியர்கள் அமிர்தசரஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பிறகு விமான நிறுவனத்தின் உதவி பாதுகாப்பு மேலாளர் போலீசில் புகார் அளித்தார். பின்னர், விமானம் ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும் போலீசார் ராஜிந்தர் சிங்கை கைது செய்துள்ளனர். ராஜிந்தர் சிங் குடிபோதையில் இருந்ததாகவும், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

9 minutes ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

48 minutes ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

3 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

4 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

4 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

5 hours ago