SupCourt MV [Image-TOI]
மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவங்களின்போது, நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு கொடுமைக்கு உள்ளான இரண்டு பெண்களும் நீதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இரு பெண்கள் நிர்வாணமாக அழைத்துச்சென்ற கொடூர குழு கூட்டு பலாத்காரம் செய்ததாக வெளிவந்த தகவல் மற்றும் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாட்டையே உலுக்கியது.
மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட வன்முறை மிகப்பெரும் கலவரமாக வெடித்தது, மேலும் கடந்த மே 4 முதல் நடந்துவரும் இந்த வன்முறை சம்பவத்தை அடுத்த இதில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதுதவிர மே 4 ஆம் தேதி இரு பெண்களுக்கும் நடந்த இந்த அநீதி கடந்த ஜூலை 19 ஆம் தேதி இணையத்தில் வீடியோ வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் தொடர்பாக இரு பெண்களும் தொடர்ந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நடக்க இருக்கிறது. ஏற்கனவே இந்த வீடியோ வெளியானபோது, தலைமை நீதிபதி சந்திரசூட், பெண்களுக்கு நிகழ்ந்துள்ள அநீதி குறித்து மிகுந்த வருத்தத்துடன் மாநில மற்றும் மத்திய அரசுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருந்தார்.
இதுவரை இந்த வழக்கு தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் வழக்கானது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டும் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் வழக்கை மணிப்பூருக்கு வெளியே நடத்தவும் உச்சநீதிமன்ற அனுமதிக்கு மத்திய அரசு கோரியுள்ள நிலையில், இந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வருகிறது.
திருவள்ளூர் : திருவள்ளூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றவாளியைப் பிடிக்க மூன்று தனிப்படைகள்…
கோவை : கடந்த 2019-ல் கோவையில் 16 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், 7 பேருக்கு சாகும்…
டெல்லி : இந்திய அணியின் புதிய கேப்டனாக ஆனதிலிருந்து சுப்மான் கில், இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில் மூன்று டெஸ்ட்…
சென்னை : பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது மனிதநேயத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்து, இந்தியா முழுவதும் உள்ள 650…
சென்னை : இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் ஜூலை 19, 2025 அன்று மாலை 7 மணிக்கு காணொலி…
சென்னை : தெற்கு ஆந்திர மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய…