Categories: இந்தியா

மணிப்பூர் கொடூரம்; உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு முன் இரு பெண்களின் மனு விசாரணை.!

Published by
Muthu Kumar

மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவங்களின்போது, நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு கொடுமைக்கு உள்ளான இரண்டு பெண்களும் நீதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இரு பெண்கள் நிர்வாணமாக அழைத்துச்சென்ற கொடூர குழு கூட்டு பலாத்காரம் செய்ததாக வெளிவந்த தகவல் மற்றும் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாட்டையே உலுக்கியது.

மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட வன்முறை மிகப்பெரும் கலவரமாக வெடித்தது, மேலும் கடந்த மே 4 முதல் நடந்துவரும் இந்த வன்முறை சம்பவத்தை அடுத்த இதில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதுதவிர மே 4 ஆம் தேதி இரு பெண்களுக்கும் நடந்த இந்த அநீதி கடந்த ஜூலை 19 ஆம் தேதி இணையத்தில் வீடியோ வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் தொடர்பாக இரு பெண்களும் தொடர்ந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நடக்க இருக்கிறது. ஏற்கனவே இந்த வீடியோ வெளியானபோது, தலைமை நீதிபதி சந்திரசூட், பெண்களுக்கு நிகழ்ந்துள்ள அநீதி குறித்து மிகுந்த வருத்தத்துடன் மாநில மற்றும் மத்திய அரசுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

இதுவரை இந்த வழக்கு தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் வழக்கானது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டும் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் வழக்கை மணிப்பூருக்கு வெளியே நடத்தவும் உச்சநீதிமன்ற அனுமதிக்கு மத்திய அரசு கோரியுள்ள நிலையில், இந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வருகிறது.

Published by
Muthu Kumar

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

40 minutes ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

2 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

3 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago