Supreme court of India [Image source : ANI]
மணிப்பூரில் தொடர் வன்முறைக்கு மத்தியில் பழங்குடியின பெண்களை நிர்வாணமாக அழைத்து சென்ற வீடியோ காட்சி சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுதொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் நேற்று, மணிப்பூரில் நடந்தது ஒரு சம்பவம் மட்டும்தானா? என சரமாரியான கேள்விகளை முன்வைத்திருந்தது. மேலும், மணிப்பூர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் தொடர்பாக பெண் நீதிபதிகளைக் கொண்ட குழுவை அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், மணிப்பூரில் பாதிக்கப்பட்ட 2 பெண்களிடம் வாக்குமூலம் பெறுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடர்பான மனுக்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு விசாரிக்கப்பட உள்ள நிலையில், உச்சநீதிமன்றம் வாக்குமூலம் பெற தடை விதித்துள்ளது.
பெண்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிஜாம் பாஷா, தனது அறிக்கையை சமர்ப்பித்தார். இதனை உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கவனத்தில் கொண்டு, பிற்பகல் 2 மணிக்கு ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சிபிஐக்கு ஆணையிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…