Manipur riots [Image source : AFP]
மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸ் தரப்பில் ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மணிப்பூர் காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில், “முயல்ங்காட், டெராகோங்சாங்பி பகுதிகள், கோதோல், போல்ஜாங் மற்றும் குவாக்டா வார்டு எண். 8 ஆகிய பகுதிகளில் ஆயுதமேந்திய மர்மநபர்களுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.
இதனிடையே, பாதுகாப்புப் படையினர் அதற்கு பதில் தாக்குதல் நடத்தி குற்றவாளிகளை விரட்டியடித்தனர். பின்னர், அருகிலுள்ள பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினரால் 9 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் விதிமீறல்கள் தொடர்பாக 843 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அந்த வகையில், அனைத்து பதட்டமான இடங்களிலும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், பிஷுபூர் மாவட்டத்தில் உள்ள மொய்ராங் லம்காயில் இருந்து அசாம் ரைபிள்ஸ் (ஏஆர்) படையை திரும்பப் பெற மணிப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவை மணிப்பூர் ஏடிஜிபி எல் கைலுன் பிறப்பித்துள்ளார்.
கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…
கடலூர் : மாவட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய ரயில் விபத்தில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…