Manish Sisodia (HT File Photo/Sanchit Khanna)
மதுபானக் கொள்கை வழக்கில் மணீஷ் சிசோடியாவின் இடைக்கால ஜாமீன் மனுவை நிராகரித்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இருப்பினும், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள மனைவியை பார்க்க மணீஷ் சிசோடியாவுக்கு நீதிமன்றம் ஒருநாள் அனுமதி அளித்துள்ளது. மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாக மணீஷ் சிசோடியா மீது குற்றம்சாட்டப்பட்டது.
கடந்த 2 மாதங்களுக்கு முன் 8 மணி நேர விசாரணைக்கு பிறகு இவரை சிபிஐ கைது செய்தது. இதையடுத்து ஜாமீன் கேட்டு இவர் மனு அளித்திருந்தார். ஆனால், மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. மணீஷ் சிசோடியா சாட்சியங்களை கலைக்கக்கூடும் என்பதால் ஜாமீன் வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.
இந்த சமயத்தில், மணீஷ் சிசோடியாவின் மனைவிக்கு உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், இடைக்கால ஜாமீன் கோரி மனு அளித்திருந்தார். இந்த நிலையில், சிசோடியாவின் இடைக்கால ஜாமீன் மனுவை நிராகரித்து, உடல்நல பாதிக்கப்பட்டுள்ள மனைவியை சந்திக்க ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்கியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…