கொரோனா தடுப்பூசி.., மோடிக்கு மன்மோகன் சிங் யோசனை..!

Published by
murugan

ஆசிரியர்கள், பேருந்து ஓட்டுநர் போன்றவர்களுக்கு தடுப்பூசி போடுவது பற்றி மாநிலங்கள் முடிவு செய்ய அனுமதிக்கலாம் என மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த யோசனைகள் கூறி பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கையை விரிவுபடுத்த மத்திய அரசுக்கு மன்மோகன் சிங் யோசனை வழங்கியுள்ளார். அடுத்த ஆறு மாதங்களுக்கு எவ்வளவு தடுப்புசி கொள்முதல் செய்ய மத்திய அரசு ஆர்டர் கொடுத்துள்ளது..? மாநிலங்களுக்கு எந்ததெந்த முறையில்  தடுப்பூசி மருந்தை மத்திய அரசு வினியோகம் செய்ய உள்ளது..? என கேள்வி எழுப்பினார்.

எத்தனை பேருக்கு தடுப்பூசி போடுவது என்பதை விட எத்தனை சதவீதம் பேருக்கு போடப்பட்டுள்ளது என்பது முக்கியம். மாநிலங்களுக்கு தடுப்பூசி மருந்து அனுப்பியது போக மத்திய அரசிடம் அவசிய தேவைகள் 10% மருந்து இருக்க வேண்டும். 45 வயதுக்கு உட்பட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவது பற்றி முடிவெடுக்க மாநிலங்களுக்கு அனுமதி தேவை. ஆசிரியர்கள், பேருந்து ஓட்டுநர் போன்றவர்களுக்கு தடுப்பூசி போடுவது பற்றி மாநிலங்கள் முடிவு செய்ய அனுமதிக்கலாம்.

தடுப்புசி உற்பத்தி திறனை நிறுவனங்கள் அதிகரிக்கத் தேவையான உதவிகளை மத்திய அரசு அளிக்க வேண்டும். மேலும் பல நிறுவனங்கள் கொரனோ தடுப்பூசி தயாரிக்க உரிமம் வழங்க வேண்டிய நேரம் இது. ஏற்கனவே இஸ்ரேலில்  கொரனோ தடுப்பூசி பல நிறுவனங்கள் தயாரிக்கும் வகையில் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. நம்பகமான அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு தடுப்பு இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்.

உள்நாட்டு உற்பத்திக்கு மேலதிகமாகத் தேவைப்படும் கொரனோ தடுப்பூசி மருந்தை  இறக்குமதி செய்யலாம். ஐரோப்பிய மருத்துவ முகாமை அமெரிக்க மருந்துகள் ஆணையம் போன்றவற்றால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

3 hours ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

3 hours ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

5 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

6 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

6 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

6 hours ago