Rahul Modi [FileImage]
பதக்கங்களை வாங்கித்தந்த மகள்களின் நிலைக்கு, பிரதமர் மோடி அரசு தான் காரணம் என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல் குற்றச்சாட்டுகளை அடுத்து அவரைக் கைது செய்யவேண்டும் என பல நாட்களாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தேசிய தலைநகர் டெல்லியில் போராட்டம் செய்து வருகின்றனர், மேலும் தங்களது எதிர்ப்பை மேலும் வலுப்படுத்த பெற்ற பதக்கங்களை புனித கங்கை நதியில் வீசப்போவதாகவும் அறிவித்திருந்தனர்.
மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு பல்வேறு தரப்பிலும் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பதக்கங்களை வீசுவது குறித்த மல்யுத்த வீரர்களின் முடிவுக்கு அவசரப்பட வேண்டாம் என இன்று அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் நிலைக்கு மோடி அரசு தான் காரணம் என கூறியுள்ளார்.
இது குறித்து ராகுல் தனது ட்வீட்டில், நாட்டிற்காக 25 பதக்கங்கள் பெற்றுத்தந்த மகள்கள், நீதி கேட்டு வீதிகளில் போராடுகின்றனர். ஆனால் 15 பாலியல் குற்றச்சாட்டு மற்றும் 2 எப்.ஐ.ஆர் விளக்குகளுடன் எம்.பி பிரிஜ் பூசன் சரண் சிங், பிரதமர் மோடியின் பாதுகாப்பில் பத்திரமாக இருக்கிறார். மகள்களின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம் என்று பதிவிட்டுள்ளார்.</
p>
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…