உலகமே தற்போது உற்று நோக்கும் வகையில் இந்தியா தலைமை தாங்கி நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றும் நாளையும் நடக்கவுள்ள இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் பொருளாதார மேம்பாடு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நாளில் ஒரேபூமி என்ற தலைப்பிலும், ஒரே குடும்பம் என்ற தலைப்பில் 2 கட்டமாக ஆலோசனை நடைபெறவுள்ளது. அதன்படி மாநாடு தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
G20 நாடுகளின் கூட்டமைப்பில், 21ஆவது நாடாக ஆப்ரிக்க ஒன்றியம் இணைக்கப்பட்டது. இதற்கான நடைமுறைகள் டெல்லியில் நடைபெற்று வரும் G20 மாநாட்டில் நடந்து முடிந்தன. ஆப்ரிக்க ஒன்றியத்தை G20-ல் இணைப்பதற்கு இந்தியா முன்மொழிந்ததை, ஏற்று பிற நாடுகளும் ஆதரவு தெரிவித்தது. மேலும், இந்த மாநாட்டில் ஆப்ரிக்க ஒன்றியத்தின் தலைவர் அசோமனியும் பங்கேற்றுள்ளார்.
இந்த மாநாடு தொடங்கவதற்கு முன்னதாகவே, இன்று காலை பிரதமர் மோடி ஜி20 மாநாடு நடைபெறவுள்ள பாரத் மண்டபத்திற்கு வருகை தரும் உலகக் தலைவர்களை கைகுலுக்கி, சிவப்பு கம்பலத்தில் நின்று வரவேற்றார். மேலும், அவர்களுடன் இணைந்து பிரதமர் மோடி தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த மாட்டிற்கு ஒவ்வொரு நாடு தலைவர்களும் ஒவ்வொரு ஸ்டைலில் வருகை தந்தனர். அதில் குறிப்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கெத்தாக கூலிங் கிளாஸ் உடன் என்ட்ரி கொடுத்திருந்தார். அந்த வகையில், அவரது புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நன்றி (PTI_News) நிறுவனம்….
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…