உத்தரபிரதேசத்தில் தாய் மளிகைப்பொருட்களை வாங்கி வரும்படி மகனை கடைக்கு அனுப்பி உள்ளார். பின்னர் மகன் புதுமனைவியுடன் வந்ததால் தாய் அதிர்ச்சியடைந்தார்.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர் ஹூடு . இவர், சுவேதா என்ற பெண்ணை 2 மாதத்திற்கு முன் யாருக்கும் தெரியாமல் கோவிலில் திருமணம் செய்துகொண்டார். ஆனால், கொரோனா காரணமாக திருமணத்திற்கான சான்றிதழை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் சுவேதாவை டெல்லியில் ஒரு வீட்டை வாடகை வீட்டில் தங்க வைத்தார்.
இந்நிலையில், சுவேதா தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் திடீரென அவரை வீட்டை காலி செய்யும்படி வற்புறுத்தி உள்ளார்.இது குறித்து தனது கணவரிடம் சுவேதா கூறினார். இதைத்தொடர்ந்து, காசியாபாத்தில் வீட்டில் இருந்த ஹூடுவை நேற்று அவரது தாய் மளிகைப்பொருட்களை வாங்கி வரும்படி கடைக்கு அனுப்பி உள்ளார்.
இந்த, சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ஹூடு சுவேதாவை காசியாபாத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். தனக்கு தெரியாமல் மகன் திருமணம் செய்துகொண்டதால் தனது மகனையும், சுவேதாவையும் வீட்டிற்குள் அனுமதிக்க முடியாது என கூறி ஹூடு தாய் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார், இருவரையும் அனுமதிக்கும்படி ஹூடு தாயிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர் முடியாது என கூறியதால் தற்காலிகமாக இருவரும் டெல்லியில் உள்ள வாடகை வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தி போலீசார் பிரச்சினையை தீர்த்து வைத்தனர்.
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…
டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…
தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…
வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…