Categories: இந்தியா

இன்று ‘நோ ஹான்கிங் டே’ கட்டுப்பாட்டை செயல்படுத்தியது மும்பை போக்குவரத்து காவல்துறை.!

Published by
செந்தில்குமார்

மும்பையின் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பிரிவு, இன்று (ஆகஸ்ட் 9) ‘நோ ஹான்கிங் டே’ கட்டுப்பாட்டை மும்பையில் செயல்படுத்தியுள்ளது. தேவையில்லாமல் சத்தமிடுவதால் சுற்றுச்சூழலில் ஒலி மாசு ஏற்படுவதோடு, மனித ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.

எனவே, எனவே, வாகன ஓட்டிகள் ஒலி எழுப்புவதைத் தடுக்கும் வகையில், மும்பையில் இன்று ‘நோ ஹான்கிங் டே’ கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நோ ஹான்கிங் டே ஆனது ஆகஸ்ட் 16ம் தேதியும் கடைபிடிக்கப்படும் என்று மும்பை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அறிவித்த மும்பை போக்குவரத்து காவல்துறை, மத்திய மோட்டார் வாகன விதிகளின் படி, வாகனங்களின் ஹார்ன்கள் மற்றும் சைலன்சர்கள் சரியாக உள்ளதா என்பதை வாகன ஓட்டிகள் உறுதி செய்ய வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆம்புலன்ஸ்கள், தீயணைப்புப் படைகள் மற்றும் பிற வாகனங்களைத் தவிர, மும்பை நகரத்தில் உள்ள அனைத்து ஓட்டுநர்கள் ஆகஸ்ட் 9 மற்றும் ஆகஸ்ட் 16 தேதிகளில் தங்கள் வாகனத்தின் ஹார்ன்களை ஒலிக்க வேண்டாம் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தேவையில்லாமல் சத்தமிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இரண்டு அல்லது நான்கு சக்கர வாகனங்களின் சைலன்சர்கள் அல்லது எக்ஸாஸ்ட் பைப்புகளை மாற்றியமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் அறிவித்துள்ளனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

யார் கனவு நனவாகும்? 191 ரன் அடிச்சா கப் உங்களுக்கு.., சவாலான இலக்கு வைத்த ஆர்சிபி.!

அகமதாபாத் : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இன் இறுதிப் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப்…

2 minutes ago

”விருதுகள், மானியங்களை விரைந்து வழங்கிடுக”- முதல்வர் ஸ்டாலினுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம்.!

சென்னை : தமிழக அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் திரைப்படங்களுக்கான மானியங்கள் கடந்த 2016 முதல் 2022 வரை நிலுவையில் உள்ளது.…

48 minutes ago

”ஜூன்-5ல் ‘தக் லைஃப்’ படத்தை வெளியிட வேண்டும்” – தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் கடிதம்.!

சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து பிறந்ததுதான்…

1 hour ago

ஆர்சிபிக்கு முதல் அடி: தூக்கி அடித்த சால்ட்.., அலேக்காக கேட்ச் புடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.!

அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…

1 hour ago

PBKS vs RCB: ஐபிஎல் இறுதிப்போட்டி.., வானில் இந்திய ராணுவத்திற்கு மரியாதை.!

அகமதாபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025ன் இறுதிப்…

2 hours ago

PBKS vs RCB: ஐபிஎல் இறுதிப் போட்டி.., வெல்லப்போவது யார்? டாஸ் – பிளேயிங் லெவன் இதோ.!

அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…

2 hours ago