கோவாவில் கொலை… 4 வயது மகனின் உடலுடன் பெங்களூருக்கு தப்பிய பெண் CEO.!

Published by
மணிகண்டன்

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் மைண்ட்ஃபுல் ஏஐ லேப்ஸ் எனும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனர் சுசனா சேத் என்பவர் தனது 4 வயது மகனை கொலை செய்து உடலை கொண்டு சென்ற குற்றத்திற்காக கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

39 வயது பெண்மணியான சுசனா சேத், பெங்களூருவை அடித்தளமாக கொண்ட மைண்ட்ஃபுல் ஏஐ லேப்ஸ் எனும் AI தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனரான உள்ளார்.  அவர் நேற்று (திங்கள்) வடக்கு கோவாவிற்கு தனது மகனுடன் சென்றுள்ளார். அங்கு ஒரு விடுதியில் தங்கி இருந்துள்ளார். அவர் அங்கிருந்து டாக்சி மூலம் பெங்களூரு புறப்பட்டு சென்றுள்ளார்.

பில்கிஸ் பானு வழக்கில், 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

சுசனா சேத் விடுதிக்கு வரும் போது உடன் இருந்த அவரது மகன், திரும்பி செல்கையில் இல்லை என்பதை விடுதி ஊழியர்கள்கண்டறிந்துள்ளனர் . அதன் பின்னர் காவல்துறைக்கு சந்தேகத்தின் பெயரில் புகாரளித்துள்ளனர். அதற்கு முன்னர், கோவாயில் இருந்து விமானத்தில் செல்ல ஊழியர்கள் அறிவுறித்தியபோதும், காரில் செல்லவே சுசனா சேத் விருப்பம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் போலீசார் சுசனா சேத்தை தொடர்பு கொண்டு 4 வயது மகன் பற்றி கேட்கையில், தனது மகன் , நண்பர் ஒருவர் வீட்டில் இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் சுசனா சேத் கூறிய முகவரி மற்றும் தகவல் என்பது போலி என விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து கர்நாடகாவில் சித்ரதுர்கா காவல் நிலையத்தில் வைத்து சுசனா சேத்-ஐ காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் , சுசனா சேத் உடமைகளை சோதனை செய்த போது அதில் சூட்கேசில் அவரது 4 வயது மகனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மேலும், கோவா விடுதியில் அவர் தங்கி இருந்த அறையில் ரத்த கரை படிந்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. எதற்காக, எப்போது  தனது 4 வயது மகனை சுசனா சேத் கொலை செய்தார், அவர் தான் கொலை செய்தாரா.? என்ன நடந்தது என்பது பற்றி காவல்துறையினர் சுசனா சேத்திடம் கர்நாடகா காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

6 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

6 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

7 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

8 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

10 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

10 hours ago