அயோத்தி ராமர் கோயிலுக்கு 2.1-டன் மணியை உருவாக்கிய இந்து, முஸ்லிம் கைவினைஞர்கள.!

Published by
கெளதம்

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த  இந்து, முஸ்லிம் கைவினைஞர்கள 2,100 கிலோ எடையுள்ள மணியை உருவாகியுள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தயால் என்பவர் 30 வருடங்களாக புது வடிவங்கள் மற்றும் அளவுகள் கொண்ட மணிகளை உருவாக்கி வருகின்றனர். ஆனால் அவரும் அவரது குழுவினரும் இந்த முறை உத்தரபிரதேசத்தின் ஜலேசர் நகரத்தில் உள்ள அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அயோத்தியில் உள்ள ராம் கோயிலுக்கு 2,100 கிலோ எடையுள்ள மணியை உருவாகியுள்ளனர்.

தயால் மற்றும் இக்பால் மிஸ்திரி  இருவரும் சேர்து இந்த அளவிலான ஒரு மணியை உருவாக்கியது இதுவே முதல் முறை என்று கூறுகிறார்கள்.

இந்த அளவிலான ஒரு மணியை உருவாக்கும்போது சிரமத்தின் அளவு பல மடங்கு அதிகரிக்கும் என்று நான்காம் தலைமுறை மணி தயாரிப்பாளரான 50 வயதான தயால் கூறுகிறார்.  எங்களுக்கு உற்சாகம் என்னவென்றால் நாங்கள் அதை ராம் கோயிலுக்கு உருவாக்குகிறோம் என்றார்.

மணி என்பது பித்தளை மட்டுமல்ல, தங்கம், வெள்ளி, தாமிரம், துத்தநாகம், ஈயம், தகரம், இரும்பு மற்றும் பாதரசம் ஆகிய எட்டு உலோகங்களின் கலவையை கொண்டது. இதுபோன்ற வேலையில் வெற்றி பெறுவது எந்த வகையிலும் உத்தரவாதம் இல்லை. உருகிய உலோகத்தை அச்சுக்குள் ஊற்றுவதில் ஐந்து விநாடிகள் தாமதமாக இருந்தாலும் முழு முயற்சியும் வீணாகிவிடும் என்று மிஸ்திரி கூறுகிறார்.

இதில் என்னவென்றால் இது ஒரு துண்டு மேலிருந்து கீழாக மட்டுமே உள்ளது. இதில் பல துண்டுகள் ஒன்றாக பற்றவைக்கப்படவில்லை. இதுதான் வேலை மிகவும் கடினமாக்கியது என்று கூறுகினார்கள்

இந்தியாவின் மிகப்பெரிய மணிகளில் ஒன்றான இந்த துண்டு ராம் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்றனர்.   கடந்த நவம்பரில் இது குறித்து முடிவு செய்யப்பட்ட உடனேயே கோயில் கட்டுவதற்கு வழி வகுத்த அயோத்தி தகராறில் ஒரு வழக்குரைஞரான நிர்மோஹி அகாராவிடமிருந்து 2,100 கிலோ மணியை தயார் செய்ய மிட்டல்களுக்கு உத்தரவு கிடைத்தது.

இந்த வேலை எங்களுக்கு வந்ததற்கு ஏதேனும் தெய்வீக காரணம் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். எனவே, அதை ஏன் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கக்கூடாது என்று நாங்கள் முடிவு செய்தோம் என்று தலைவரின் சகோதரர் ஆதித்யா கூறுகிறார். இது அவர்களுக்கு 21 லட்சம் டாலர் வரை செலவாகும் என்று கூறினார்.

சுமார் 25 தொழிலாளர்கள், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவரும் ஒரு மாதம், ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் உழைத்து நாட்டில் மிகப்பெரிய மணியை உருவாக்க முடியும். இதற்கு முன் தயால் உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலில் பயன்படுத்தப்பட்டு வரும் 101 கிலோ மணி மணியை உருவாக்கியது குறிபிடத்தக்கது.

 

 

 

Published by
கெளதம்

Recent Posts

ஒரே இடத்தில் வைத்து ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமனிடம் காவல்துறை விசாரணை.!

திருவள்ளூர் : சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 17 மணி நேரம் திருத்தணி டி.எஸ்.பி. அலுவலகத்தில்…

32 minutes ago

கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து.., சாலையோரம் நின்றிருந்த 2 பெண்கள் பரிதாப பலி.!

திருப்பூர் : பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து லாரியின் அதிக…

45 minutes ago

மதுரை எய்ம்ஸ்: “கற்பனை காட்சிக்கே 10 வருஷமா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.!

சென்னை : 2019-ல் மதுரை எய்ம்ஸ் ஹாஸ்பிடலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், இதன் 3D வடிவமைப்பு வீடியோ இன்றைய தினம்…

59 minutes ago

கீழடி ஆய்வு மேற்கொண்ட அமர்நாத் இடமாற்றம் – மத்திய தொல்லியல் துறை உத்தரவு.!

சென்னை : கீழடி அகழாய்வு தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் 2014 முதல் நடைபெற்று…

1 hour ago

எப்படி இருக்கும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை? 3டி காட்சி வெளியீடு.!

மதுரை : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், தோப்பூர் பகுதியில் 222 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படுவதற்கு மத்திய…

2 hours ago

அகமதாபாத்-லண்டன் ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரத்து.!

அகமதாபாத் : ஏர் இந்தியா விமானம் எண் AI 159 புது டெல்லியில் இருந்து அகமதாபாத்திற்கு வந்தது. அங்கிருந்து லண்டனுக்குப்…

2 hours ago