Chandrayaan-3 [Image Source : Twitter/@isro]
உலக நாடுகளே எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திரயான் 3 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்பட உள்ளது. அதன்படி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சசதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவு தளத்திலிருந்து, எல்.வி.எம் 3 – எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான் – 3 விண்கலம் இன்று பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
3,900 கிலோ எடை கொண்ட சந்திராயன் – 3 விண்கலத்தில் 7 விதமான ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. லேண்டர், ரோவர் உள்ளிட்டவையுடன் விண்ணில் பாயும் சந்திராயன் 3 விண்கலம், நிலவின் தரைப்பரப்பை ஆய்வு செய்யும். மேலும், நிலவின் தரைப்பரப்பில் மின்னூட்ட அதிர்வுகள், நிலநடுக்க அதிர்வுகள், தட்பவெப்ப நிலை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான திட்ட செலவு 615 கோடி ரூபாயாகும். நிலவில் தரையிறங்க சந்திரயான் – 3 விண்கலம் 10 கட்டங்களாக பயணம் மேற்கொள்கிறது. பூமியில் இருந்து புறப்படும் எல்.வி.எம்.3 – எம்4 ராக்கெட், 179 கி.மீ., துாரம் உள்ள சுற்றுவட்ட பாதையில், சந்திரயான்-3 விண்கலத்தை நிலை நிறுத்தும். இதுவே முதல் கட்டமாகும். பின்னர் புவியின் நீள்வட்டப் பாதையில் விண்கலத்தை சுற்ற வைப்பது தான் இரண்டாவது கட்டமாகும். புவியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து 36,500 கி.மீ., துாரம் வரை சந்திரயான்-3 விண்கலம் அனுப்பப்படும்.
இதன்பின், உந்து இயந்திரம், ராக்கெட் போல் செயல்பட்டு, சந்திரயான் – 3 விண்கலத்தை, நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு திருப்பி, நிலவை நோக்கி பயணிக்க வைக்கும். சந்திராயன் 3 விண்கலம் நிலவை அடைய 40 நாட்கள் எடுத்து கொள்ளும் எனவும் கூறப்படுகிறது. இதனால், ஆகஸ்ட் 23 அல்லது 24ம் தேதி, சந்திரயான் – 3 விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் சாதனம் தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த நிகழ்வுக்காகத்தான் இந்தியா மட்டுமின்றி உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.
மேற்கு வங்காளம் : OpenAI இன் ChatGPT நடைமுறைக்கு வந்ததிலிருந்தே தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறது. இப்போது ChatGPT இன்…
கர்நாடகா : இயக்குநர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உருவாகியுள்ள 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அசாத்திய மாஸ்…
சென்னை : சென்னையின் திடீரென பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.…
சென்னை : சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் சென்று கொண்டிருக்கும் வேலையில் பாமக உட்கட்சி…
தூத்துக்குடி : மதுரை எலியார்பட்டி மற்றும் தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் ஆகிய இரண்டு சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க ஜூன்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நடத்திய "மறக்குமா நெஞ்சம்" என்கிற தலைப்பில் இசை நிகழ்ச்சி ஒன்றை 2023ம் ஆண்டு…