தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர் நமன்வீர் சிங்…துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!

Published by
Edison

தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர் நமன்வீர் சிங் பிரார்,மொஹாலியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தேசிய துப்பாக்கி சுடும் வீரர் மற்றும் பயிற்சியாளரான நமன்வீர் சிங் பிரார் (வயது 29), திங்கள்கிழமை அதிகாலை மொஹாலியின் செக்டர் 71 இல் உள்ள தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டைக் கேட்டதும், குடும்ப உறுப்பினர்கள் அவரை மொஹாலியின் 6 வது கட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவருக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இது தொடர்பாக,சப்-இன்ஸ்பெக்டர் அமன்தீப் சிங் கூறுகையில்,”நமன்வீர் சிங் தனது அறையில் தனியாக இருந்தபோது அதிகாலை 3:35 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.பிரார் தனது உரிமம் பெற்ற ஆஸ்திரியாவில் தயாரிக்கப்பட்ட க்ளோக் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார்”,என்று கூறினார்.

மேலும், பிரேத பரிசோதனைக்கு பிறகு, உடல் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

டிஏவி கல்லூரி, செக்டர் 10, மற்றும் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான பிரார்,இந்திய பல்கலைக்கழக சாம்பியன்ஷிப் மற்றும் உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் இரட்டை ட்ராப் துப்பாக்கி சுடுதல் நிகழ்வில் வெண்கலம் வென்றார். அவர் மாஸ்டர்ஸ் மீட் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார். சில வருடங்களுக்கு முன்பு. தற்போது, அவர் இளம் துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

மளமளவென சரிந்த பங்குகள்.., ‘குற்றச்சாட்டுகள் தவறானவை’ – சன் டிவி குழுமம் விளக்கம்.!

சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…

16 minutes ago

போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!

இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…

43 minutes ago

“ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ED சோதனை செய்ய அதிகாரம் இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…

45 minutes ago

சென்னையில் இருந்து செல்லவும், வரவும்விருந்த 8 விமானங்கள் ரத்து.!

சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…

2 hours ago

போரை மாய்ப்போம், மனிதம் காப்போம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…

2 hours ago

“அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” – பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி.!

வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…

2 hours ago