வறுமையை காரணம் காட்டி காப்பத்தில் அடைப்பதா? காப்பக குழந்தைகளை குடும்பத்தில் ஒப்படைக்க- NCPCR அதிரடி உத்தரவு!

Published by
Kaliraj

நாடு முழுதும் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் 2.56 லட்சம் குழந்தைகளை குடும்பத்தாரிடம் ஒப்படைக்க தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:- குடும்ப சூழ்நிலை வறுமை உள்ளிட்ட பல் வேறு காரணங்களால் நாடு முழுதும் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் 2.56 லட்சம் குழந்தைகள்  வசித்து வருன்றனர். அவ்வற்றில் தமிழகம் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மகாராஷ்டிரா, மேகாலயா, மற்றும் மிசோரம் ஆகிய 8 மாநிலங்களில்  மட்டும் சுமார் 1.84 லட்சம் குழந்தைகள் காப்பகங்களில் வசிக்கின்றனர்.

இந்நிலையில் இக்குழந்தைகளை எல்லாம் அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உடனடியாக  நடவடிக்கை எடுக்கும்படி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் 8 மாநில அரசுகளுக்கும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. வறுமையை காரணம்  காட்டி ஒரு குழந்தையை குடும்பத்தில் இருந்து பிரித்து காப்பகங்களில் அனுமதிப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்றும். வறுமை காரணமாக ஒரு குழந்தை காப்பகத்தில்  வசிக்கிறது என்றால் அது சம்பந்தப்பட்ட மாநில அரசின் தோல்வியையே  இது உணர்த்துவதாக குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் குழந்தையை தங்களுடன் வைத்து பராமரிக்கும் அளவுக்கு  குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டியது அந்தந்த  மாநில அரசுகளில் முதல் கடமை என்றும் காப்பகங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகம் நிலவுவதால் சம்பந்தப்பட்ட 8 மாநிலங்களில் குழந்தைகள் காப்பங்களில்  வசிக்கும் குழந்தைகளை அவரவர் குடும்பங்களிடம் ஒப்படைக்கும் பணியினை 100 நாள்களுக்குள் மாநில அரசுகள் துவக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகம்,  ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய 5 தென் மாநிலங்கள் ஆணையத்தின் சார்பில் பல அமர்வில் கலந்து கொண்டு பல  ஆயிரக்கணக்கான குழந்தைகள் சார்ந்த பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு அளித்து, குழந்தைகள் காப்பகங்களில் நேரடி ஆய்வு செய்ததின் பயனில் இன்று  இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரித்துள்ளது.மேலும் இது தொடர்பாக விரைவில் இந்த 8 மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து நேரடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

 

Recent Posts

இனிமே கனரக வாகனங்களுக்கு இது தான் டைம்! கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்!

இனிமே கனரக வாகனங்களுக்கு இது தான் டைம்! கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்!

சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…

20 minutes ago

ஈரான் கொடுத்த எச்சரிக்கை…நேரடியாக போரில் இறங்குகிறதா அமெரிக்கா?

வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…

54 minutes ago

லண்டனில் ஆதரவற்று நிற்கும் குழந்தைகளுக்கு உதவி செய்வோம்! உறுதியளித்த டாடா குழும தலைவர் சந்திரசேகரன்!

மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

3 hours ago

அடுத்து இந்த 2 இடம் தான் டார்கெட்..உடனே வெளியேறுங்க! அலர்ட் கொடுத்த இஸ்ரேல்!

இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…

4 hours ago

அனைவரும் பிழைத்துவிட வேண்டும் என நினைத்தேன்! விமான விபத்து குறித்து சந்திரசேகரன்!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…

4 hours ago

ராமாபுரம் விபத்து : L&T நிறுவனத்திற்கு 1 கோடி அபராதம் விதித்த மெட்ரோ நிர்வாகம்!

சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…

5 hours ago