நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி புதுச்சேரி அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதியும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்து வந்த நிலையில், தேசிய தேர்வு முகமை திட்டமிட்டபடி தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவித்தது.
சமீபத்தில், உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வை தள்ளி வைக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்ற மறுப்பு தெரிவித்தது. இதனிடையே நீட்தேர்வை தள்ளிவைக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற உத்தரவை பரிசீலனை செய்ய கோரி 6 மாநில அமைச்சர்கள் மனு தாக்கல் செய்தனர்.அதில், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ,மகாராஷ்டிரா பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 6 மாநில அமைச்சர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி புதுச்சேரி அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு சார்பில் அரசு கொறடா ஆனந்தராமன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.இந்த சீராய்வு மனு அடுத்தவாரம் விசாரணைக்கு வரவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…
அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…