கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கக்கோரி மத்திய சுற்றுசூழல் துறைக்கு கர்நாடக மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது. அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தும் கர்நாடக அரசானது அணை கட்ட தீவிரமாக முயன்று வருகிறது.
கடந்த 20ம் தேதி மத்திய அரசுக்கு கர்நாடக அரசு எழுதியுள்ள கடிதத்தில் பெங்களூரு மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேகதாதுவின் குறுக்கே அணை கட்டுவது அவசியமாகிறது என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் நீரை சேமித்து அதில் இருந்து 400 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்றும் அதனால் பெங்களூர் மாநகரின் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேகதாது அணை கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள மொத்த மதிப்பு 9000 கோடியாகும் . இதற்காக மாநில அரசானது 5252.400 ஹெக்டேர் நிலம் காயகப்படுத்துகிறது. இதில் 4996 ஹெக்டேர் நிலம் அணையில் நீர் தேக்கவும், 256.40 ஹெக்டேர் நிலமானது பிற கட்டுமான வேலைகளுக்கும் பயன்படுத்த கர்நாடக மாநில அரசானது திட்டமிடப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…