Categories: இந்தியா

உலக தடகள போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா!

Published by
கெளதம்

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் ,இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.

இதன் மூலம் 40 ஆண்டுகால உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார். மேலும், 87.82 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்த பாகிஸ்தான் வீரர் ஷர்ஷத் நசீம் வெள்ளி வென்றுள்ளார்.

முன்னதாக, 2016- தெற்கு ஆசியா, 2017 – ஆசிய சாம்பியன்ஷிப், 2018 – காமன்வெல்த். 2018- ஆசியா, 2020 – ஒலிம்பிக், 2021 டோக்கியோ ஒலிம்பிக், 2022 – டைமண்ட் லீக், 2023 – உலக சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார் குறிப்பிடத்தக்கது.

தங்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா தனது வெற்றி குறித்து பேசுகையில், நான் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியிலும் என் மீது அழுத்தம் கொடுப்பது வழக்கம். ஆனால், இரண்டு அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் இது போன்ற பெரிய போட்டிகளில் (உலக சாம்பியன்ஷிப்) சிறப்பாக செயல்படும் பொறுப்பு எனக்கு அதிகம் உள்ளது.

ஒவ்வொரு முறையும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். எனது வழக்கமான பயிற்சியுடன், நான் அடிக்கடி காட்சிப்படுத்தலில் ஈடுபடுகிறேன், இது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது என பேட்டியளித்தார்.

Published by
கெளதம்

Recent Posts

ஹிட் மேன் ஹாப்பி அன்னாச்சி…, வான்கடேவில் ரோஹித் சர்மா பெயரில் ஸ்டாண்ட்..!

மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…

9 hours ago

மாமனாக வென்றாரா நடிகர் சூரி.? ட்விட்டர் விமர்சனம் இதோ.!

சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…

9 hours ago

”மாமன்” திரைப்படம் ரிலீஸ்: மண் சோறு சாப்பிட்ட மதுரை ரசிகர்கள் குறித்து சூரி வேதனை.!

சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…

11 hours ago

போர் பதற்றமா இருக்கு நான் வரல…ஐபிஎல் தொடருக்கு டாட்டா காட்டிய மிட்செல் ஸ்டார்க்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…

12 hours ago

இன்று 9, நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

13 hours ago

ஐபிஎல் போட்டி நாளை தொடக்கம்.! பெங்களூரு மழை ஆட்டத்தை கெடுக்குமா?

பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…

13 hours ago