NEET இன் முடிவை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது.
மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக தேசிய அளவில் ‘நீட்’ என்ற பெயரில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவ நுழைவுத் தேர்வை ‘நீட்’ ஆகஸ்ட் 01 ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது, பின்னர் நீட் தேர்வு செப்டம்பர் 12, 2021 அன்று நடத்தப்பட்டது. இந்த ஆண்டு சுமார் 16 லட்சம் பேர் தேர்வெழுதினர்.
இந்நிலையில், NEET UG 2021 இன் முடிவை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in முடிவைப் பார்க்கலாம். தெலங்கானாவைச் சேர்ந்த மிருணால் குட்டேரி, டெல்லியைச் சேர்ந்த தன்மய் குப்தா, மகாராஷ்டிராவைச் சேர்ந்த கார்த்திக் ஜி நாயர் ஆகியோர் முதலிடம் பெற்றுள்ளனர். மூவரும் ஒரே மாதிரியான 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
உத்தரப்பிரதேசம்-ஆக்ராவைச் சேர்ந்த நிகர் பன்சால் அகில இந்திய அளவில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளார். அதே நேரத்தில் தமிழகத்தில் நாமக்கல் மாணவி கீதாஞ்சலி மற்றும் மாணவர் பிரவீன் 710 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். அர்ச்சித்தா என்ற மாணவியை 705 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…