புதிய அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்! முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் கருத்து!

Published by
லீனா

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த மே மாதம் 30-ம் தேதி பதவியேற்றது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில், இந்த புதிய அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.

இந்நிலையில், ஸ்டான்போர்டு பல்கலைக்கழத்தில் இந்திய பொருளாதார கொள்கை குறித்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர், உர்ஜித் படேல் இந்திய பொருளாதார கொள்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கு வங்கிகள் அதிக அளவில் கடன்களை வழங்க ஆரம்பித்தால், அது சிக்கலில் முடியும் என்றும், கடன்களை அதிக அளவில் கொடுத்தால், வங்கிகளில் வராக்கடன்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த வராக்கடன்களை சமாளிக்க பொதுத்துறை வங்கிகளுக்கு அரசு நிதியளிக்க வேண்டும் என்றும், இதன்மூலம் அரசின் நிதி பற்றாக்குறை அதிகரிக்கும் நிலை ஏற்படும் என்றும் உர்ஜித் படேல் கருத்து தெரிவித்துள்ளார்.

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

7 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

7 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

8 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

8 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

9 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

11 hours ago