கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு காரணமாக ஜிஎஸ்டி வரி வசூல் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய அரசு கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. இதையடுத்து, தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தகங்கள் இயங்க ஆரம்பிக்க தொடங்கினர். இதனால், ஜிஎஸ்டி வரி வசூல் ஒவ்வொரு மாதம் அதிகரித்திருந்தது.
இந்நிலையில், கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,15,174 கோடி என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் சிஜிஎஸ்டி ரூ .21,365 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ .27,804 கோடி, ஐஜிஎஸ்டி ரூ .57,426 கோடி (பொருட்கள் இறக்குமதி செய்ய சேகரிக்கப்பட்ட, 27,050 கோடி உட்பட) மற்றும் செஸ் ₹ ரூ .8,579 கோடி (பொருட்கள் இறக்குமதி செய்ய சேகரிக்கப்பட்ட 971 கோடி உட்பட)
கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயை விட 2020 டிசம்பருக்கான வருவாய் உடன் ஒப்பிடும்போது 12% அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ. 1,13, 866 கோடி ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டது அதிகபட்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் குறிப்பாக தமிழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.6,422 கோடியும், கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.6,905 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2020 -ஆம் ஆண்டு தமிழகத்தில் மட்டும் 8 % உயர்ந்துள்ளது.
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…