NEWYEAR2021: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து.!

Published by
பாலா கலியமூர்த்தி

பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நாட்டு மக்களுக்கு 2021 புத்தாண்டு வாழ்த்துக்களை தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். 

உலகம் முழுவதும் 2021-ஆம் ஆண்டு புத்தாண்டை வண்ணவிளக்குகள், வாண வேடிக்கைகளுடன் மக்கள் உற்சகமாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். புது வருட பிறப்பை பலரும் இந்த வருடம் இனிய வருடமாக இருக்கட்டும் என்று வாழ்த்துக்கள் தெரிவித்தும், மலர்க்கொத்து வழங்கியும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். 2021-ஆம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும் மற்றும் செழிப்பை கொண்டு வரட்டும். இந்த ஆங்கிலப் புத்தாண்டில் நம்பிக்கை மற்றும் ஆரோக்கியம் மேலோங்கட்டும் என்று உற்சாகமுடன் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். புதிய தொடக்கத்திற்கான வாய்ப்பையும் தனிப்பட்ட மற்றும் கூட்டு வளர்ச்சிக்கான தீர்வையும் புத்தாண்டு வழங்குகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட சவால்கள், ஒற்றுமையாக முன்னேறிச்செல்ல வேண்டியதன் உறுதியை வலுப்படுத்தியுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, காங்கிரஸ் எ.ம் ராகுல் காந்தி 2021 புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். புதிய ஆண்டு துவங்கும்போது, நாம் இழந்தவர்களை நினைவில் வைத்துக் கொள்கிறோம். எங்களுக்காக பாதுகாத்து தியாகம் செய்த அனைவருக்கும் நன்றி. அநியாய சக்திகளை கண்ணியத்துடனும், மரியாதையுடனும் போராடும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுடன் என் இதயம் இருக்கிறது. அனைவர்க்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று பகிர்ந்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இனிமே இது தான் ரூல்ஸ்…சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் கொண்டு வந்த ஐசிசி!

இனிமே இது தான் ரூல்ஸ்…சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் கொண்டு வந்த ஐசிசி!

டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…

8 minutes ago

விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி! மத்திய அரசு எடுத்த முடிவு!

டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…

53 minutes ago

“விலங்குகள் தாக்குவது இயல்பு”…அலட்சியமாக பதில் சொன்ன ராஜகண்ணப்பன்.. எழுந்த கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…

1 hour ago

”ரயில் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும்” – ரயில்வே துறை இணை அமைச்சர்.!

சென்னை : வரும் 1-ம் தேதியன்று ஏ.சி. மற்றும் ஏசி அல்லாத ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு…

2 hours ago

”கூமாப்பட்டி – பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும்” – விருதுநகர் ஆட்சியர் உறுதி.!

விருதுநகர் : ஊட்டி, கொடைக்கானல் என பிரபல சுற்றுலாத் தலங்களை எல்லாம் ஓரம்கட்டி விட்டுத் திடீரென கூமாபட்டி கிராமம் வலைத்தளங்களில்…

2 hours ago

கூட்டணி ஆட்சி விவகாரம்: ‘அமித் ஷாவும், எடப்பாடியும் பேசி முடிவெடுப்பார்கள்’ – நயினார் நாகேந்திரன்.!

சென்னை : தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், அதிமுக…

2 hours ago