Categories: இந்தியா

மருத்துவக் கல்வி மாணவர்களுக்கான NExT தேர்வு மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது தள்ளிவைப்பு.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலை ஏற்று மருத்துவக் கல்வி மாணவர்களுக்கான NExT தேர்வு மறு அறிவிப்பு வரும் வரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. இளநிலை மாணவர்கள் முதுநிலை மருத்துவ படிப்பில் சேரவும், பயிற்சி மேற்கொள்ளவும் நெக்ஸ்ட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அடுத்தநாடு தேர்வு நடைபெறும் என தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை ஒத்திவைத்தது தேசிய மருத்துவ ஆணையம்.

2019-ஆம் ஆண்டு பேட்ச் எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு எடுக்கும் வரை நெக்ஸ்ட் தேர்வு நடைபெறாது. நெக்ஸ்ட் தேர்வை கைவிட கோரி பிரதமருக்கு கடந்த மாதம் கடிதம் எழுதியிருந்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். நெக்ஸ்ட் தேர்வு கிராமப்புற, சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கும் நெக்ஸ்ட் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறியிருந்தார் முதலமைச்சர்.

[Image Source : Twitter/@Vivekpandey21]
Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

7 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

7 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

8 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

8 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

9 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

11 hours ago