Categories: இந்தியா

மூன்று மாநிலங்களில் 25 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!

Published by
பாலா கலியமூர்த்தி

கர்நாடகா, கேரளா, பீகார் மாநிலங்களில் 25 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை. 

புல்வாரிஷரீப் சதி வழக்கில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற குற்றச்சாட்டு அடிப்படையில் கர்நாடகா, கேரளா மற்றும் பீகார் உள்ளிட்ட 3 மாநிலங்களில் சுமார் 25 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சோதனை நடத்தி வருகிறது.

பாட்னாவின் புல்வாரிஷரிஃப் பகுதியில் ஏற்பட்ட வன்முறை மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த PFI மற்றும் அதன் தலைவர்கள் உள்ளிட்டவர்களின் ஈடுபாடு தொடர்பான சதித்திட்டத்துடன் தொடர்புடைய, சந்தேக நபர்களின் வளாகங்களில் சோதனைகள் நடந்து வருகின்றன.

இதுதொடர்பாக முன்னதாக, பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள புல்வாரிஷரிப் காவல் நிலையத்தில், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கை தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி NIA-ஆல் மீண்டும் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், 6 பேர் கைது செய்யப்பட்டனர். PFI தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த ஆண்டு பிப்ரவரி 4-5 தேதிகளில், என்ஐஏ பீகாரின் மோதிஹாரியில் 8 இடங்களில் சோதனை நடத்தியது. அப்போது, ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்பாடு செய்த இருவரை கைது செய்தது.

இந்த நிலையில், புல்வாரிஷெரீப் சதி வழக்கில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், என்.ஐ.ஏ அதிகாரிகள் பல கட்டங்களாக சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று கர்நாடகா, கேரளா, பீகார் மாநிலங்களில் சுமார் 25 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, கர்நாடகாவில் 16 இடங்களிலும், பீகார், கேரளாவில் 9 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதனிடையே, பிரதமர் மோடி கடந்த ஆண்டு பீகார் சென்றபோது, அவரை கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டதாக கண்டறியப்பட்டது. இதனால் திடீர் நடத்தி 2 தீவிரவாதிகளை கைது செய்தனர். பின்னர் நடந்த விசாரணையில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளுக்கும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

9 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

9 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

10 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

11 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

13 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

14 hours ago