Categories: இந்தியா

ஆந்திராவில் 60 இடங்களில் என்ஐஏ சோதனை!

Published by
பாலா கலியமூர்த்தி

ஆந்திர மாநிலம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, இடதுசாரி தீவிரவாதம் அல்லது நக்சல் வழக்கில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அதன்படி, திருப்பதி, கடப்பா, அனந்தப்பூர், குண்டூர், நெல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் நக்சலுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் வழக்கறிஞர்கள், புரட்சி எழுத்தாளர்கள் மற்றும் பல்வேறு இயக்க தலைவர்கள் வீடுகள், அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறது.

இரு மாநிலங்களிலும் சந்தேக நபர்களின் இருப்பிடங்கள் மற்றும் மறைவிடங்களில் சோதனை இன்னும் நடந்து வருகிறது. அதன்படி, இன்று காலை முதல் தனி NIA குழுக்கள் மாநில போலீஸ் படைகளுடன் சோதனைகள் நடந்து வருகிறது. தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கரில், தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) சம்பந்தப்பட்ட வெடிகுண்டு பொருட்கள், ட்ரோன்கள் உள்ளிட்டவை மீட்டெடுத்தது தொடர்பான வழக்கில் தொடர்ச்சியாக சோதனைகள் நடந்து வருகிறது.

ஜூன் மாதம் கொத்தகுடேம் செர்லா மண்டலத்தில் மூன்று பேரிடம் இருந்து வெடிகுண்டு பொருட்கள், ட்ரோன்கள் மற்றும் லேத் இயந்திரம் கைப்பற்றப்பட்டதை அடுத்து, குற்றம் சாட்டப்பட்ட 12 பேர் மீது என்ஐஏ வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில், இன்று ஆந்திர மாநிலம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளது. இதனால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தமிழிலிருந்து கன்னடம்…ஆதாரம் இருக்கா கமல்ஹாசன்? கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி!

சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படம் கர்நாடகாவில் வெளியாகுமா…

24 minutes ago

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு கொண்டுவந்த கட்டுப்பாடுகள் செல்லும் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை : சென்னை உயர் நீதிமன்றம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு விதித்த நேரக் கட்டுப்பாடு மற்றும் ஆதார் இணைப்பு…

1 hour ago

தேசிய அளவில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம்…புகழ்ந்து தள்ளிய துறைமுக ஆணையம்!

தூத்துக்குடி : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் (வ.உ.சி) துறைமுகம், 2024-25 நிதியாண்டில் 50 மில்லியன் டன் சரக்குகளையும், 1…

2 hours ago

ஜனநாயகன் ஷூட்டிங் ஓவர்…இன்று முதல் முழு நேர அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் விஜய்?

சென்னை : நடிகர் விஜய் த.வெ.க கட்சியை தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் அதற்கான வேலைகளில் அவரும்…

4 hours ago

மிஸ் பண்ணாதீங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

சென்னை : தமிழ்நாடு அரசு 2023-ஆம் ஆண்டு முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை (கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்)…

4 hours ago

35 லட்ச ரூபாய் முறைகேடு…? “தினேஷ் மாஸ்டர் பதவி விலகனும்”..கொந்தளித்த சங்க உறுப்பினர்கள்!

சென்னை : தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது என்னவென்றால், நடன இயக்குனர்கள் சங்கத்தின்…

5 hours ago