நாம் ஏற்கனவே தெரிவித்தது போல இன்று கோவாவில் ஜிஎஸ்டி கவுன்சில் நிர்வாகிகளுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்தாலோசித்தார். அப்போது அவர் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரிகளை அதிரடியாக குறைத்து அறிவித்துள்ளார். இதன் எதிரொலியாக இன்று இந்திய பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை புள்ளிகள், 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்து காணப்படுகிறது.
உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் கார்ப்பரேட் வரியானது 25.17 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. முதலீடு மற்றும் உற்பத்தி வளர்ச்சியை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்த வரி கணக்கீடு வருகிற ஏப்ரல் 1ம் தேதி முதல் கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊக்கத்தொகை ஏதுமின்றி செயல்படும் நிறுவனங்களுக்கு 22 சதவீத வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக புதிதாக தொடங்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 17.01 சதவீதமாக உள்ளது.
அதேபோல் வருகிற அக்டோபர் 1ஆம் தேதி முதல் புதிதாக தொழில் தொடங்க உள்ளவர்கள் கார்ப்பரேட் வரியாக 15% மட்டுமே செலுத்தும் வாய்ப்பு தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
சலுகைகள் பெற்று வரும் நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச வாரியாக கருதப்படும் மேட் வரியானது, 18.5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…
சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…