பொதுத்தேர்வுகளை நடத்த தடையில்லை- மத்திய அரசு.!

Published by
Dinasuvadu desk

கொரோனாவால்  ஒத்திவைக்கப்பட்ட பொதுத்தேர்வுகள் மாநிலங்கள் நடத்த தடையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10 -வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15-ம் தேதி முதல் ஜூன் 25 -ம் தேதி வரை நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதற்கு முன் 10 -வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 01-ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா காலத்தில் பொதுத்தேர்வை ஒத்திவைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுதாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து, ஆசிரியர் சங்க தலைவர் மாயவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். இதையடுத்து , ஜூன் 15-ம் தேதி முதல் ஜூன் 25 -ம் தேதி 10 -வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொதுத்தேர்வுகள் நடத்த தடையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. சில நிபந்தனைகளுடன் தேர்வுகளை நடத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா  தெரிவித்துள்ளார்.

10,+2 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதவரும் மாணவர்களுக்கு வசதியாக பேருந்து வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தேர்வு நடைபெறும் மையங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். மேலும் கொரோனா கட்டுப்பாட்டு  பகுதிகளில் தேர்வு மையங்களை அமைக்க கூடாது என மாநில அரசுக்கு மத்திய அரசு  தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

கூட்ட நெரிசல் விவகாரம்: எச்சரிக்கையை மீறி கொண்டாட்டம்.., இறுதியில் நடந்த விபரீதம்.!

கூட்ட நெரிசல் விவகாரம்: எச்சரிக்கையை மீறி கொண்டாட்டம்.., இறுதியில் நடந்த விபரீதம்.!

கர்நாடகா : ஐபிஎல்-லில் வெற்றி பெட்ரா ஆர்.சி.பி அணி, வெற்றியின் கொண்டாத்தின்போது நேற்றைய தினம் நடந்த சின்னசாமி மைதானம் அருகே…

10 hours ago

‘நிகழ்நேர தரவுகள் இனி மக்களுக்கு கிடையாது’.., வானிலை மையத்தின் அதிர்ச்சி செயல்.!

டெல்லி : இந்திய வானிலை மையம் சார்பில் வெளியிடப்படும் நிகழ்நேர தரவுகளை (IMD-AWS Reports) பொதுபயன்பாட்டிலிருந்து நீக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

10 hours ago

”NDA கூட்டணியில் இணைய விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளேன்” – நயினார் நாகேந்திரன்.!

கோவை : தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு, நயினார் நாகேந்திரன்,…

12 hours ago

11 ரசிகர்கள் இறந்த விவகாரம்: ஆர்சிபி அணி மீது வழக்குப்பதிவு.!

கர்நாடகா : பெங்களூருவில் நேற்றைய தினம் நடந்த கூட்ட நெரிசல் தொடர்பாக, பெங்களூரு காவல்துறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி),…

12 hours ago

இணையத்தில் வெளியானது ”தக் லைஃப்” திரைப்படம் – படக்குழு அதிர்ச்சி.!

சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்து, ஏ.ஆர்.…

13 hours ago

என்னது..!! தக் லைஃப் படத்தில் ‘முத்தமழை’ பாடல் இல்லையா? ரசிகர்கள் ஏமாற்றம்.!

சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் கர்நாடக மாநிலம்…

13 hours ago