Categories: இந்தியா

மருத்துவமனை விரைந்தார் ஒடிசா முதலமைச்சர்!

Published by
பாலா கலியமூர்த்தி

மீட்பு பணிகளை துரிதப்படுத்த பால்சோர் மாவட்ட அதிகாரிகளுக்கு ஒடிசா முதலமைச்சர் உத்தரவிட்டார். 

ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த விபத்தால் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மீட்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சமயத்தில், பால்சோர் அருகே ரயில் விபத்து இடத்தில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட் நாயக் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

விபத்து நேரிட்டது எப்படி என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஒடிசா முதலமைச்சர் நவீன் பட் நாயக், மீட்பு பணிகளை துரிதப்படுத்த பால்சோர் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், மிகவும் சோகமான ரயில் விபத்து, இடிபாடுகளில் இருந்து மக்களை காப்பாற்ற ஒரே இரவில் உழைத்த உள்ளூர் குழுக்கள், உள்ளூர் மக்கள் மற்றும் பிறருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.

ரயில்வே பாதுகாப்புக்கு எப்போதும் முதலிடம் கொடுக்க வேண்டும். விபத்தில் காயமடைந்தவர்கள் பாலசோர் மற்றும் கட்டாக்கில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல்களை உடனுக்குடன் பிரதே பரிசோதனை செய்து அடையாளம் காணும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை காண பால்சோர் மருத்துவமனைக்கு விரைந்தார் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட் நாயக்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

44 minutes ago

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

2 hours ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

3 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

6 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

6 hours ago

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்.! பிளே ஆஃப் செல்லும் அணி எது?

டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…

7 hours ago