Categories: இந்தியா

மருத்துவமனை விரைந்தார் ஒடிசா முதலமைச்சர்!

Published by
பாலா கலியமூர்த்தி

மீட்பு பணிகளை துரிதப்படுத்த பால்சோர் மாவட்ட அதிகாரிகளுக்கு ஒடிசா முதலமைச்சர் உத்தரவிட்டார். 

ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த விபத்தால் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மீட்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சமயத்தில், பால்சோர் அருகே ரயில் விபத்து இடத்தில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட் நாயக் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

விபத்து நேரிட்டது எப்படி என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஒடிசா முதலமைச்சர் நவீன் பட் நாயக், மீட்பு பணிகளை துரிதப்படுத்த பால்சோர் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், மிகவும் சோகமான ரயில் விபத்து, இடிபாடுகளில் இருந்து மக்களை காப்பாற்ற ஒரே இரவில் உழைத்த உள்ளூர் குழுக்கள், உள்ளூர் மக்கள் மற்றும் பிறருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.

ரயில்வே பாதுகாப்புக்கு எப்போதும் முதலிடம் கொடுக்க வேண்டும். விபத்தில் காயமடைந்தவர்கள் பாலசோர் மற்றும் கட்டாக்கில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல்களை உடனுக்குடன் பிரதே பரிசோதனை செய்து அடையாளம் காணும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை காண பால்சோர் மருத்துவமனைக்கு விரைந்தார் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட் நாயக்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

17 minutes ago

விருதுநகர் : பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…

1 hour ago

சபாஷ் சரியான போட்டி…குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா!

குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…

2 hours ago

மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம்!

சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…

3 hours ago

தற்காலிகமாக விலகிய தவெக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்! காரணம் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…

3 hours ago

ட்ரம்ப்புடன் மோதல்..புதிய கட்சியை தொடங்கியதாக அறிவித்த எலான் மஸ்க்!

நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…

4 hours ago