Army Deploy Odisha [Image-AFP]
ஒடிசாவில் நேற்று நடந்த கோர ரயில் விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு இந்திய ராணுவம் வரவழைக்கப்பட உள்ளது.
ஒடிசாவில் நேற்று இரவு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்களும் ஒன்றின் மீது ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 238 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 900-க்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு தற்போது இந்திய ராணுவம் வரவழைக்கப்பட உள்ளது. காயமடைந்தவர்களை மீட்பதற்கும் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, மற்றும் ஆம்புலன்ஸ் சேவை போன்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ராணுவமும் கூடிய விரைவில் சீக்கிரமாக பல்வேறு தளங்களிலும் இருந்து அனுப்பப்பட்டுள்ளன என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை 650க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறும்போது, விபத்து குறித்த உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்றும் தற்போது முழு கவனமும் மீட்புப்பணிகளில் மட்டுமே இருக்கும் என்றும் அவர் கூறினார்.
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…