Army Deploy Odisha [Image-AFP]
ஒடிசாவில் நேற்று நடந்த கோர ரயில் விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு இந்திய ராணுவம் வரவழைக்கப்பட உள்ளது.
ஒடிசாவில் நேற்று இரவு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்களும் ஒன்றின் மீது ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 238 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 900-க்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு தற்போது இந்திய ராணுவம் வரவழைக்கப்பட உள்ளது. காயமடைந்தவர்களை மீட்பதற்கும் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, மற்றும் ஆம்புலன்ஸ் சேவை போன்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ராணுவமும் கூடிய விரைவில் சீக்கிரமாக பல்வேறு தளங்களிலும் இருந்து அனுப்பப்பட்டுள்ளன என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை 650க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறும்போது, விபத்து குறித்த உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்றும் தற்போது முழு கவனமும் மீட்புப்பணிகளில் மட்டுமே இருக்கும் என்றும் அவர் கூறினார்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…