நாயகன் மீண்டும் வரார்.! இந்திய சந்தையில் களமிறங்கும் PUBG புதிய வடிவில்…. வெளியான சூப்பர் தகவல்.!

Published by
மணிகண்டன்

இந்தியாவில் மீண்டும் PUBG விளையாட்டை அதிகாரிகள் அனுமதித்துள்ளதாக கிராப்டன் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். 

கடந்த 2020, செப்டம்பரில் இந்திய கவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இன் பிரிவு 69A இன் கீழ் நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, 117 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடையில் இளைஞர்கள் மத்தியல் மிக பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய PUBG விளையாட்டும்  அடங்கும். அந்த சமயம் கிட்டத்தட்ட 33 மில்லியன் (3 கோடிக்கும் அதிகம்) பயனர்களை PUBG கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு,PUBG ஸ்டுடியோஸ் மற்றும் தென் கொரியாவின் வீடியோ கேம் நிறுவனமான Krafton ஆகியவை சேர்ந்து, இந்தியாவில்,  PUBG விளையாட்டு செயலியை மறுஉருவாக்கம் செய்து PUBG India Private Ltd என பதிவு செய்தனர்.  மே 2021 இல் BGMI என அறிமுகப்படுத்துவதாக Krafton அறிவித்து, இறுதியாக ஜூலை 2 அன்று Android சாதனங்களுக்கும் ஆகஸ்ட் 18 அன்று iOS சாதனங்களுக்கும் BGMI வெளியிடப்பட்டது. ஒரு வருட காலப்பகுதியில், BGMI செயலியை 100 மில்லியன் பயனர்களை தாண்டியது. ஆனால் BGMI செயலியையும் மத்திய அரசு தடை செய்தது.

இந்நிலையில், தற்போது PUBG செயலியானது மீண்டும் இந்தியாவில் வரவுள்ளதாக கிராஃப்டன் CEO தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், Battlegrounds Mobile India இன் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க அனுமதித்த இந்திய அதிகாரிகளுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என குறிப்பிட்டார். கடந்த சில மாதங்களாக இந்திய இணையதள விளையாட்டு பிரிவு அளித்த ஆதரவிற்கும் பொறுமைக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என கிராப்டன் தலைமை அதிகாரி அன்மையில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், இந்தியாவில் மீண்டும் PUBG விளையாட்டு வர இந்திய அதிகாரிகள் ஒப்புதல் வழங்கியுள்ளது தெளிவாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூரவ அறிவிப்புக்காளான் எப்போது இந்தியாவில் மீண்டும் PUBG வரும் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

Published by
மணிகண்டன்

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

8 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

8 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

10 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

10 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

12 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

13 hours ago