ஆன்லைன் ஷாப்பிங் : ஆர்டர் செய்தது பாஸ்போர்ட் கவர்; வந்தது ஒரிஜினல் பாஸ்போர்ட்!

Published by
Rebekal

அமேசானில் பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்த கேரளாவை சேர்ந்த நபருக்கு ஒரிஜினலாக பாஸ்போர் அனுப்பப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டம் கனியம்பேட்டா எனும் கிராமத்தை சேர்ந்த மிதுன் பாபு என்பவர் தனது பாஸ்போர்ட்டை வைப்பதற்காக ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசானில் பாஸ்போட் கவர் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு அமேசான் நிறுவனத்தில் இருந்து நவம்பர் 1 ஆம் தேதியும் மிதுனுக்கு பார்சல் வந்துள்ளது. அதில் அவர் ஆர்டர் செய்த பாஸ்போர்ட் தான் இருக்கும் என்று நினைத்துள்ளார்.

ஆனால் அதை பிரித்து பார்த்த போது பாஸ்போர்ட்டுக்கு பதிலாக உண்மையான ஒருவரது ஒரிஜினல் பாஸ்போர்ட் இருந்துள்ளது. இந்திய அரசால் விநியோகிக்கப்பட கூடிய பாஸ்போர்ட் எப்படி அமேசான் நிறுவனத்தின் மூலமாக வந்துள்ளது என்பது தெரியாமல் குழப்பம் அடைந்த மிதுன், அமேசான் வாடிக்கையாளர் சேவைப் பிரிவுக்கு அழைத்துள்ளார். அங்கும் அவருக்கு சரியான பதில் அளிக்கப்படாததால் அவர் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்து திருச்சூரை சேர்ந்த முகமது சலீம் என்பவருடைய பாஸ்போர்ட் என்பதை கண்டறிந்துள்ளார்.

இது குறித்து அவரிடமும் கூறி உள்ளார். அப்பொழுது தான் தெரிய வந்துள்ளது அந்த பாஸ்போர்ட்டின் உரிமையாளர் முகமது சலீம் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அமேசானில் பாஸ்போர்ட் கவர் வாங்கியுள்ளார். அப்பொழுது அதில் தனது பாஸ்போர்ட்டை வைத்து பார்த்துள்ளார். ஆனால் பாஸ்போட் கவர் பிடிக்காததால் மீண்டும் அதை திருப்பி அனுப்பியுள்ளார்.

திருப்பி அனுப்பும் பொழுது அவர் வைத்திருந்த பாஸ்போர்ட்டை எடுக்க மறந்துள்ளார். இந்நிலையில் அவர் திருப்பி அனுப்பிய பாஸ்போர்ட் கவர் தான் மிதுனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் தான் மிதுனிடம் பாஸ்போர்ட் கிடைத்துள்ளது.

Published by
Rebekal

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

10 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

10 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

10 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

11 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

11 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

14 hours ago