Manipur Riots - Parliment of India [File Image]
மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளன.
மணிப்பூர் கலவரம் மே மாதம் ஆரம்பித்து இன்னும் முடியாமல் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பலரது கோரிக்கைகளாக உள்ளது.
இந்நிலையில் இந்த கோரிக்கைகள் மேலும் பல மடங்கு வலுக்கும் வண்ணம் நேற்று வெளியான ஒரு கொடூர வீடியோ ஒன்று அமைந்துள்ளது. அந்த வீடியோவில் இரு பெண்களை ஆடைகளின்றி ஒரு கும்பல் இழுத்து செல்லும் படி அமைந்துள்ளது.
நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த விடியோவானது நேற்று வெளியானது முதல் ஆளும் கட்சி , எதிர்க்கட்சி என பாகுபாடின்றி பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் இன்று தொடங்க உள்ள மழைக்கால கூட்டத்தொடரில் முதலில் மணிப்பூர் கலவரம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று கூறி, மற்ற அலுவல் விவகாரங்களை ஒத்திவைக்க வேண்டும் என கூறி மக்களவை மாநிலங்களவை என இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதனை ஏற்று விவாதங்கள் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…