ஜாமீனுக்கு எதிர்ப்பு -நித்தியானந்தா பதில் அளிக்க உத்தரவு

Published by
Venu
  • நித்தியானந்தாவிற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
  • இந்த மனு தொடர்பாக நித்தியானந்தா பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நித்தியானந்தா மீது  கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.இதன் விளைவாக குஜராத்தில் உள்ள அவரது ஆஸ்ரமம் மூடப்பட்டது.

கடந்த 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நித்தியானந்தா மீது அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பன் மற்றும் ஆர்த்தி ராவ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர்.இதனையடுத்து பல நிபந்தனைகளுக்கு அடுத்து நித்தியானந்தாவிற்கு ஜாமீன் அந்த வருடம் ஜூன் மாதம் வழங்கியது கர்நாடகா உயர்நீதிமன்றம்.

இந்நிலையில் அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சிறப்பு மனுதாக்கல் செய்தார்.அதாவது அவர் தாக்கல் செய்த வழக்கில்,நித்தியானந்தா மீது ராம் நகர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நடைபெற்று வருகிறது.நிபந்தனை ஜாமீனில் வெளியாகியுள்ள நிலையில்,50-க்கும் மேற்பட்ட விசாரணையில் அவர்  ஆஜராகவில்லை.நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்ப்பட்டுள்ளார்.எனவே நீதிமன்ற   உத்தரவை மதிக்காததால் நித்தியானந்தாவின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல்  டி .குன்கா  அமர்வில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த அமர்வு,இந்த வழக்கு தொடர்பாக   ஒரு வாரத்தில் நித்தியானந்தா  மற்றும் சிபிசிஐடி பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி  உத்தரவு  பிறப்பித்தனர். 

 

Published by
Venu

Recent Posts

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

4 minutes ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

30 minutes ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

1 hour ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

2 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

10 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

11 hours ago