டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பகுதியில் உள்ள மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மாசுபாட்டின் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். அதிகரித்து வரும் மாசுபாட்டால், சுவாசிப்பதில் சிரமம், கண் எரிச்சல் மற்றும் ஒவ்வாமை போன்ற உடல்நலப் பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்கின்றனர். இதனை கட்டுப்படுத்த டெல்லியில் கெஜ்ரிவால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் மற்ற மாநிலங்களில் பதிவுசெய்யப்பட்ட Uber ,OLA மற்றும் பிற ஆப்-அடிப்படையிலான வாகனங்கள் நுழைவதை டெல்லி அரசாங்கம் தடை செய்துள்ளது. இந்த அறிவிப்பை டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
கெஜ்ரிவால் அரசின் இந்த முடிவிற்குப் பிறகு, டெல்லியில் டிஎல் எண்ணுடன் கூடிய ஆப்-சார்ந்த வாகனங்கள் மட்டுமே இயங்கும். உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் டெல்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு தடை விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கோபால் ராய் தெரிவித்தார்.
டெல்லி பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிப்பு:
காற்று மாசு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு டெல்லி அரசு குளிர்கால விடுமுறையை அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 9 முதல் நவம்பர் 18 வரை அனைத்து பள்ளிகளிலும் குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, காற்று மாசுபாடு காரணமாக, டெல்லி அரசு பள்ளிகளில் நவம்பர் 10 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைனில் வகுப்புககள் நடைபெற்றது. குளிர்கால விடுமுறை அறிவிப்புக்குப் பிறகு டெல்லியில் பள்ளிகள் நவம்பர் 18 வரை மூடப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…